districts

img

தமிழர் திருநாள்: மக்களிடையே உற்சாக பெருக்கு

அறுவடை திருநாளாகவும், உழவர் களின் திருநாளாகவும், உழைப்பை போற்றும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அனைத்து தரப்பினரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் நிலை யில், பேரூர் ஆதின வளாகத்தில், இஸ்லாமியர்கள் இணைந்து மத நல்லிணக்க பொங்கல் விழா கொண் டாடப்பட்டது. இதேபோன்று, கோவை யில் கிறிஸ்தவ ஆலய வளாகத்தில்  பொங்கல் பண்டிகை மத நல்லிணக்க பொங்கல் நடைபெற்றது. கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண் டிகையை கொண்டாடப்பட்டது. முன்னதாக, பாரம்பரிய உடை அணிந்து, ஆலய வாசலில் சாணம் தெளித்து, கோலமிட்டு, மாவிலை தோரணங்கள், மாட்டு வண்டி என  தமிழ்வழி பண்பாடு இசை கருவிகளு டன் கிறிஸ்தவ பாடல்களை பாடி,  திருச்சபை மக்கள் சேர்ந்து பொங்கல் வைத்து, கொண்டாடியது அனை வரின் கவனத்தையும் ஈர்த்தது.

பள்ளிபாளையம், ஜன.16- தமிழர் திருநாளன ஞாயிறன்று மக் கள் ஒற்றுமை தைப்பொங்கல், விளை யாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் மற் றும் குழந்தைகள் உற்சாகமாக பங் கேற்றனர்.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,  பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியக்குழு சார்பில், காவேரி ஆர்.எஸ்., வசந்த நகர் ஆகிய இரண்டு கிளைகளில், மக் கள் ஒற்றுமை பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற் றது. காவேரி ஆர்.எஸ். பகுதியில் நடை பெற்ற மக்கள் ஒற்றுமை பொங்கல் விளையாட்டு போட்டிக்கு, கிளைத் தலைவர் எஸ்.பூபாலன் தலைமை தாங் கினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்  கௌசல்யா, வாலிபர் சங்க கொடி யினை ஏற்றினார். இந்த நிகழ்வில் கிளைச் செயலாளர் எஸ்.சதீஷ்குமார் வரவேற்புரை ஆற்றினார்.

 வசந்த நகர் பகுதியில் நடைபெற்ற மக்கள் ஒற்றுமை விளையாட்டுப் போட் டிக்கு, கிளை தலைவர் டி.அரவிந்தன் தலைமை தாங்கினார். கிளைச் செயலா ளர் ரவின் வரவேற்புரை ஆற்றினார். சிறு வர் - சிறுமியர் ஓட்டப்பந்தயம், சோடா  பாட்டில் நீர் நிரப்புதல், பலூன் ஊதி உடைத்தல், ஸ்லோ சைக்கிள், வாழைப் பழம் கடித்தல், சட்டி உடைத்தல், லக்கி  கார்னர், மியூசிக் சேர் உள்ளிட்ட விளை யாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த  நிகழ்வில் வாலிபர்  சங்க வாலிபர் சங் கத்தின் மாநில உதவி தலைவர்  பா. லெனின், மாவட்ட தலைவர் எம்.லட்சு மணன், மாவட்ட செயலாளர் மணிகண் டன், ஒன்றிய செயலாளர் எம்.நவீன்  உள் ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரை யாற்றினர். காலையில் துவங்கிய விளை யாட்டு போட்டிகள் மாலையில் நிறைவு பெற்றது.

இதனைத்தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி கள் நடைபெற்றது.  தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூ ரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா .நடைபெற்றது. வாலி பர் சங்க வட்ட தலைவர் கண்ணன் தலை மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாதர் சங்க வட்ட செயலாளர் கிருஷ்ண வேணி, வாலிபர் சங்க வட்ட செயலா ளர் குப்பன், சிபிஎம் வட்ட செயலாளர் தி. வ.தனுசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோவை கோவை காவல் பயிற்சி பள்ளி மைதானத்தில் கோவை மாநகர காவல் துறையினர், அவர்களது குடும்பத்தின ருடன் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். இதில், கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரி கள் கலந்து கொண்டனர். அப்போது,  காவல் துறையினரும், அவர்களது குடும் பத்தினரும் இணைந்து பாரம்பரியமான கும்மி அடித்து, பாட்டு பாடி பொங்கல் வைத்தனர்.