திருப்பூர், ஜன.13- திருப்பூர் மாநகராட்சியுடன் இணைந்து நொய்யல் பண்பாட்டு அமைப்பு நடத்தும் சமத்துவப் பொங்கல் விழா வரும் நாட்களில் நடைபெற உள்ளது. அதையொட்டி நொய் யல் ஆற்றுப் படுகையில் நடைபெறும் தூய்மைப் பணிகளை சனியன்று மாநகராட்சி மேயர் பார்வையிட்டார். திருப்பூர் மாநகராட்சியுடன் இணைந்து நொய்யல் பண்பாட்டு அமைப்பு நடத்தும் சமத்துவப் பொங்கல் விழா ஜன.15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. அதன் படி வரும் 15ஆம் தேதி மாலை 4 மணிக்கு சமத்துவப் பொங்கல் மற்றும் சமத் துவ கும்மி, சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவி பாரதிக்கு பாராட்டு விழா, இதைத்தொடர்ந்து இரவு 9.15 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 16 ஆம் தேதி மாலை 4 மணிக்கு, பறையிசை, பரத நாட்டி யம், செண்டை மேளம்,கிராமிய இசை கச் சேரி, களரி மற்றும் கம்பத்தாட்டம் ஆகியன நடக்கிறது. 17 ஆம் தேதி 1008 பானையில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற வுள்ளது. இதில், அமைச்சர்கள், நாடாளு மன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பி னர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங் கேற்க உள்ளனர். இவ்விழாவையொட்டி நொய்யல் ஆற்று படுகையை சுத்தப்படுத்தும் பணி, வண்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சனியன்று மாநக ராட்சி மேயர் நா.தினேஷ் குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் மாநகராட்சி ஆணையர், மாநகர காவல் ஆணையர், நொய்யல் பண்பாட்டு அமைப்பு நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் நடைபெற்று வரும் பணிக ளைப் பார்வையிட்டனர். கடந்த ஆண்டு திருப்பூர் மாநகராட்சிக்குட் பட்ட 60 வார்டுகளை சேர்ந்த 3000க்கும் மேற் பட்ட பெண்கள் சாதி, மத பேதமின்றி நொய் யல் கரையில் பொங்கல் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், தொழில் நகரமான திருப்பூரில் பணி யாற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் பொங்கல் போன்ற திருவிழா காலங்களில் சொந்த ஊருக்கு சென்று விடுவதால் வெறிச் சோடி காணப்படும். இது போன்ற நாட்களில் சுற்றுலாத் தலங்கள் எதுவும் இல்லாததால், பொதுவாக குடும்பத்துடன் திரையரங் குகளுக்கு சென்று திரைப்படம் பார்ப்பது மட் டுமே ஒரே பொழுதுபோக்காக உள்ளது. தற்போதைய சூழலில் ஒரு திரையரங்கத் திற்கு சென்று திரைப்படம் காண்பதற்கு ஆயி ரக்கணக்கில் செலவாகிறது. இச்சூழலில் இது போன்ற விழாக்களை அரசு முன்னெ டுப்பது வரவேற்கத்தக்கது. சென்ற ஆண்டு நாங்களும் சமத்துவ பொங்கல் வைத் தோம். இதில் இன்னும் சுவாரசியம் என்ன வென்றால் அனைத்து மத பெண்களும் இதில் பங்கேற்றனர் என்பதுதான். மேலும் இரவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை குடும்பத்து டன் கண்டு ரசித்தோம். ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அமர்ந்து கலை நிகழ்ச் சிகள் காண்பது ஒருவித புத்துணர்ச்சியை ஏற் படுத்தியது. இது போன்ற கலை நிகழ்ச்சிகள் அடிக்கடி திருப்பூரில் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தனர்.