ஈரோடு, ஏப்.7- ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷிற்கு ஆதரவாக தூய்மைப் பணி யாளர்களிடம் வாக்கு சேகரிக்கப்பட்டது. இந்தியா கூட்டணியின் சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.ஈ.பிர காஷ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) மற்றும் தொழிலா ளர் முன்னேற்ற சங்கம் ஆதரவைத் தெரிவித்துள்ளது. மேலும் பிரகாஷிற்கு ஆதரவாக ஈரோடு மாநகராட்சி திண்டல் பகுதி யில் தூய்மைப் பணியாளர்களை சந்தித்து சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், தொமுச உள்ளாட்சி பொது நலப்பணியாளர் சங்க பொதுச்செயலாளர் ஆர்.கிருஷ்ணன் ஆகியோர் பிரகாஷிற்கு வாக்கு கேட்டு உரையாற்றினர்.