உடுமலை, ஏப்.5- அனைத்து பகுதி மக்களுக்கும், திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் சீரான தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொள்ளாச்சி தொகுதி வேட்பா ளர் கே.ஈஸ்வரசாமி வாக்குறுதி அளித்துள்ளார். இந்தியா கூட்டணியின், பொள் ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே. ஈஸ்வர சாமி, மடத்துக்குளம் ஒன்றியப் பகு திகளுக்குட்பட்ட, முள்ளங்கிவலசு, தாமரைபாடி, பணத்தபட்டி, தாந்தோனி, மலையாண்டிபட்டி ணம்,கடத்தூர், கணியூர், ஜோத்த பட்டி, மைவாடி, ராஜாவூர், நரசிங் காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில், உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடு பட்டார். இந்த பிரச்சாரத்தின் போது வாக்காளர்களிடம் பேசிய வேட்பா ளர், மடத்துக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருந்துவ மனை விரிவு படுத்தபடும். அனைத்து பகுதிகளுக்கும் திரு மூர்த்தி அணையில் இருந்து கூட் டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் சீரான தண்ணீர் விநியோகம் செய்யப்ப டும். போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையில், சிறப்பு சாலை கள் அமைத்து தரப்படும். நெல் கொள்முதல் நிலையங்கள் சரி யான நேரத்தில் துவக்கபடும். அமா ரவதி சர்க்கரை ஆலை நவீனப்ப டுத்தபடும் என வாக்குறுதி அளித் தார். இப்பிரச்சாரத்தின் போது, திமுக மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலூகா செயலாளர் ஆர்.வி.வடிவேல், கரும்பு விவசாய சங்கத் தலைவர் எம்.எம்.வீரப் பன் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், தொண் டர்கள் என பலர் கலந்து கொண்ட னர்.