பொள்ளாச்சி, பிப்.21- பொள்ளாச்சி அருகே மண் கொண்டு மூடப்பட்ட குளத்தால், ஊருக்குள் தண் ணீர் புகும் என அப்பகுதி பொதுமக் கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். பொள்ளாச்சி - பணிக்கம்பட்டி சாலையில் டி.கோட்டாம்பட்டி பொதுக் கழிப்பிடம் எதிரே மழைநீர் தேங்கி நிற் கும் சிறுகுளம் உள்ளது. பாதாள சாக் கடை திட்டப்பணிக்காக அங்கு கழிவு நீர் உந்து நிலையம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டபோது, அந்த குளத்தின் ஒரு பகுதி மண் கொட்டி மூடப்பட்டது. இதற்கு அப்பகுதி மக் கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, குளத்தை மூடாமல் விட்டு விட்டனர். இந்நிலையில், தற்போது அப்பகுதியை சேர்ந்த சிலர் மீண்டும் பொக்லைன் எந்திரம் மூலம் மண் மற்றும் கட்டிட கழிவுகளை குளத்தின் உள்ளே கொட்டி குளத்தை மூடி யுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக் கள் கூறுகையில், மேற்கண்ட குளமா னது இப்பகுதியில் உள்ள வீடுகளில் ஆழ்குழாய் கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர காரணமாக இருந்தது. குளம், நாளடைவில் கழிவுநீர் தேங் கும் இடமாக மாறியது. தற்போது, அந்த இடத்தில் மண் கொட்டி குளம் மூடப்பட்டுள்ளது. இதனால், ராஜேஸ் வரி நகர், மகாலட்சுமி நகர் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த குடியிருப்பு பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீர் புகும் அபாயம் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குளம் மூடப்படுவதை தடுப்பதோடு, தூர்வார வேண்டும் எனவும் கோரிக்கை விடுத் துள்ளனர்.