districts

img

பொள்ளாச்சி கவியருவி மூடல்

கோவை, ஜூலை 5- தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து  வருவதால் கோவை குற் றாலம் மற்றும் பொள் ளாச்சி கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது. இதன்காரண மாக சுற்றுலா பயணிகள் இந்த அருவிகளுக்கு செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. கடந்த சில தினங்க ளாக கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் கனமழை பெய்து வருவ தால், தற்போது பொள்ளாச்சியில் அமைந்துள்ள கவி அரு வியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதில், மரக் கிளைகள் மற்றும் பெரிய அளவிலான பாறை கற்கள் உருண் டோடுகிறது. மேலும் தடுப்பு கம்பிகளை தாண்டி வெள்ள நீர் கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக் கப்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேபோல், கோவை குற்றாலத்திலும் வெள்ள நீர் ஆர் பரித்து கொட்டுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து, அருவிக்கு செல்லும் பாதையை வனத் துறையினர் மூடியுள்ளனர்.