அவிநாசி, அக். 7 – அவிநாசியில் திங்களன்று அனைத்து வியாபாரிகள் சங்கம் அறி வித்துள்ள கடையடைப்பை வாபஸ் பெறும்படி அரசியல் கட்சிகள் வலியு றுத்தியுள்ளன. அவிநாசி பி.ராமமூர்த்தி நினைவ கத்தில் சனியன்று, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியச் செயலாளர் அ.ஈஸ்வரமூர்த்தி தலை மையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, அதிமுக, மதிமுக, காங்கி ரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் திங்களன்று அறிவிக்கப் பட்டுள்ள கடையடைப்பை வாபஸ் பெற வேண்டும் என்று அனைத்துக் கட்சிகள் சார்பில் கேட்டுக் கொண் டனர். அவிநாசி நகரப் பகுதியில் சாலை யோர வியாபார கடைகள் அமைப்பதை ஒழுங்குபடுத்த வேண்டும். இதற்கு சாலையோர வியாபாரிகள், தொழிற்சங் கங்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதி காரிகள், போக்குவரத்து காவல்துறை கொண்ட குழுவை உடனடியாக அமைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். அவிநாசி நகரப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட் டுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் பி.முத்து சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சண்முகம், பழனிச்சாமி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியத் துணைச் செயலாளர் கோபால், அதிமுக ஜெய பால், மூர்த்தி, மதிமுக பாபு, காங்கிரஸ் கட்சி கோபாலகிருஷ்ணன், சாய்கண் ணன், உட்பட பலர் கலந்து கொண்ட னர்.