உடுமலை, பிப்.28- ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள் கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடிமங்கலம் ஒன்றியக்குழு சார் பில் செவ்வாய்க்கிழமை மூங்கில் தொழுவு பிரிவில் தோழர்கள் கே. பழனிசாமி மற்றும் டி. சின்னான் நினைவுத் திடலில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.லட்சுமணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், கட் சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப் பினர் கே.ரங்கராஜ் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இதில், ஒன்றியச் செயலாளர் என். சசிகலா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ். மோகனசுந்தரம், வெ.ரங்கநாதன், ஆர்.ஓம்பி ரகாஷ், எ.தங்கவடிவேலன், ஜீ.தங்கவேல், ஆர்.கலைவாணி மற்றும் கட்சியின் கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட திரளானோர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். இந்த பொதுக் கூட்டத்தில் ஒன்றியக்குழு சார் பில் கட்சியின் வளர்ச்சி நிதியாக ரூபாய் 50 ஆயிரம் மாவட்டச் செயலாளரிடம் அளிக்கப் பட்டது.