மேட்டுபாளையம், நவ. 12- தொடர் மழையால் குண்டும், குழியுமாக மாறி யுள்ள மேட்டுபாளையம், ஊட்டி சாலையில் சுற்றுலா பேருந்து சிக்கியது. இத னால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, தற்காலிகமாக சாலையை போலீசார் சீரமைத்தனர். மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரு தினங் களாக இடைவிடாத தொடர் மழை பெய்து வருகிறது. வெள்ளியன்று மேட்டுப்பாளை யத்தில் 22 மிமீ அளவிற்கு மழை பதிவாகி யுள்ளது. இதனால் நகர பகுதிகளில் ஆங் காங்கே சாலைகள் பழுதாகி குண்டும், குழியு மாகி அதில் தண்ணீர் தேங்கி நின்றுள்ளது. மேலும், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலை யில் திருப்பூர் குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளங்கள் தோண்டப்படுவதால் சாலை கடுமையாக சேதமடைந்து ஆங் காங்கே குழிகளில் மழை நீர் தேங்கி நிற் கின்றது. இதனால் போக்குவரத்து முக்கித் துவம் வாய்ந்த இச்சாலையில் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்லும் நிலை உருவாகி யுள்ளது. இந்நிலையில் சனியன்று சென்னையில் இருந்து ஊட்டிக்கு வந்த ஆம்னி சுற்றுலா மினி பேருந்து ஒன்று மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே இருந்த சாலையின் குழி யில் சிக்கி கொண்டது. பேருந்தின் முன் பக்க சக்கரம் சிக்கி அதன் இணைப்பு துண்டாகி டயரும் வெடித்து நடுரோட்டில் முடங்கி நின்றது. இதனால் இப்பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் குழியில் சிக்கிய வாகனத்தை மீட்டு பழுது நீக்க நடவடிக்கை எடுத்தனர். மேலும், சாலை யின் நடுவே இருந்த குழிகளை தற்காலிக மாக சீரமைத்தனர். போலீசாரின் துரித நடவடிக்கையால் சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பழுதான சுற்றுலா வாகனம் புறப்பட்டு சென்று போக்குவரத்து சீரானது. மீண்டும் இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் சாலைகளை உடனடி யாக செப்பனிட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.