கோபி, நவ.29- கோபிசெட்டிபாளையம் நகர் பகுதியில் இரவு ரோந்து செல்லும் காவலர் கள், குடியிருப்புகளின் கத வுகளை தட்டி அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வ தாக நகர்மன்ற கூட்டத் த்தில் திமுக கவுன்சிலர் புகாரளித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யம் நகர்மன்ற கூட்டம், தலைவர் நாக ராஜ் தலைமையிலும், ஆணையர் சசிகலா முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தின் முன்னதாக, நகாரட்சியின் தினசரி சந்தை வணிக வாளாக கடைகள் ஏலம் விடப்பட்ட தொகை குறைவாக இருப்பதால், மறு ஏலம் விடவேண்டும் என பெரும்பாலான நகர்மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனைய டுத்து திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் விஜய் கருப்புசாமி பேசுகையில், மொடச்சூர் பகுதியில் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இதனால் இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவ லர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகை யில், நள்ளிரவில் குடியிருப்புகளின் கதவு களை தட்டி விசாரிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர், என்றார். இதற்கு பதில ளித்த நகர்மன்ற தலைவர், உடனடியாக காவல்துறையிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.