districts

img

கோவிலில் நகை, பணம் கொள்ளை காவல் துறையினர் விசாரணை

இளம்பிள்ளை, பிப்.2- பிரசித்தி பெற்ற இளம்பிள்ளை வைத்தீஸ்வரன் கோவிலில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப் பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக் குட்பட்ட சதுரபாளையம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இந்நிலை யில், திங்களன்று பூஜைகள் முடிந்து, பூசாரி ராஜா (52) கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இதன் பின் செவ்வாயன்று காலை பூசாரி ராஜா, கோவிலை திறக்க சென்றபோது, கோவிலின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  மேலும், கருவறை பூட்டும் உடைக்கப்பட்டு, சுமார்  8 பவுன் தங்க நகைகள், அங்கிருந்த பீரோவில் வைக் கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம், 200  கிராம் வெள்ளி பொருட்கள் அனைத்தையும் அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் மகுடஞ்சாவடி காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதை யடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை  சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர் களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், லாக்கரை உடைக்க முடியாததால், அதில் வைக்கப்பட்டிருந்த 35 பவுன் தங்க நகைகள் கொள்ளை போகாமல் தப் பித்தது குறிப்பிடத்தக்கது.