இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் தலைக்கவசம் அணிய போலீசார் அறிவுறுத்தல்
திருப்பூர், ஆக. 5 - இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் வாகன ஓட்டி, பின்னால் அமர்ந்து பயணிப்பவர் என இருவரும் தலைக் கவம் அணிந்து பயணிப்பது உயிர் காக்க அவசியம் என்று மாநகர காவல் துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற் கொண்டனர். இது குறித்து மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு கூறுகையில், இருசக்கர வாகன விபத்துகளில் ஓராண்டில் 90 பேர் உயிரிழந்தனர். அந்த விபத்துகளை ஆராய்ந்து பார்த்ததில் தலைக் காயத்தின் காரணமாகவே 90 பேரும் உயிரிழந்துள்ளனர். எனவே தலைக் கவசம் அணி வது மிகவும் அவசியம். அதேபோல் வாகன ஓட்டிகள் அல்லா மல் பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள் 22 பேர் உயிரி ழந்துள்ளனர். அதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது பின் னால் அமர்ந்திருப்பவர்கள் தலைக் கவசம் அணிவதில்லை என்பதால்தான் விபத்தில் சிக்கி தலைக் காயம் ஏற்பட்டு உயி ரிழக்கின்றனர் எனத் தெரியவந்தது. எனவே வாகனத்தை ஓட்டிச் செல்வோர் மட்டுமின்றி பின் னால் அமர்ந்து பயணம் செய்வோரும் தலைக் கவசம் அணிய வேண்டியது அவசியம். பொதுவாக சாலைகளில் பார்த்தால் இருசக்கர வாகனங்களில் பத்தில் ஒரு வாகனத்தில்தான் இரண்டு பேராக பயணம் செய்கின்றனர். ஆனால் அதில் பின்னால் பயணித்து உயிரிழப்போர் கணக்கைப் பார்த்தால் நான்கில் ஒன்றாக உள்ளது. எனவே இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும். இது குறித்து சமூக ஊடகங்கள் மூலமும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறோம் என்று காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு கூறியுள்ளார்.
சமையலர் பாப்பாள் வழக்கு ஆக.26க்கு ஒத்திவைப்பு
திருப்பூர், ஆக. 5 – அவிநாசி ஒன்றியம் திருமலைக்கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி சமையலர் பாப்பாள் மீது தீண் டாமை வன்கொடுமை நிகழ்த்தப்பட்ட வழக்கில் விசாரணை ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சமையலர் பாப்பாளை அவர் பணியாற்றிய பள்ளியில் செயல்படவி டாமல் சாதி ஆதிக்க சக்தியினர் தொடர்ந்து இடையூறு செய்து வந்தனர். அவரது சொந்த ஊரில் பள்ளியில் சமையல் பணி யிடம் காலியானபோது அங்கு அவர் பணிமாறுதல் பெற்று வந்தார். ஆனால் உள்ளூர் ஆதிக்கசாதியினர் அங்கும் அவரை பணி செய்ய விடாமல் தீண்டாமை வன்கொடுமை நிகழ்த்தப் பட்டது. இதை எதிர்த்து அவர் நடத்திய போராட்டத்திற்கு தீண் டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட முற்போக்கு அமைப் புகள் ஆதரவளித்தன. இதன் விளைவாக 75 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆறாண்டுகளுக்குப் பிறகு இவ்வழக்கு, திருப்பூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் சனியன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பாப்பாள் தரப்பி னரும், குற்றவாளிகள் தரப்பினரும் விசாரணைக்கு வந்தி ருந்த நிலையில், பாதிக்கப்பட்ட பாப்பாள் தரப்பு அரசு சிறப்பு வழக்கறிஞர் பாண்டியன், கால அவகாசம் கேட்டு மனு செய் தார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 26 அன் றைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
அதிகளவு பிளிச்சிங் பவுடர் கலப்பு குடிநீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதி
தருமபுரி, ஆக. 5- மாரியம்பட்டி மக்கள் குடிக்கும் குடிநீரில் அதிகளவில் பிளிச்சிங்பவுடர் கலப்பதால் குடிநீரை பயன்படுத்த முடிய வில்லை. சரியான அளவில் பிளிச்சிங் பவுடர் கலக்க வேண்டு மென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மாரி யம்பட்டி கிராமத்தில், சுமார் 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன, இங்கு ஊராட்சியின் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் அதிகப்படியான பிளிச்சிங் பவுடரை கலக்கப்படு கிறது. இதனால் குடிநீரை பயன்படுத்த முடியவில்லை. குடி நீரை அருந்தும் போது வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியில் ஒகேனக்கல் குடிநீர் வழங்க நட வடிக்கை எடுக்கவேண்டும். ஊராட்சியின் மூலம் விநி யோகிக்கப்படும் நீரில் பிளிச்சிங் பவுடர் அதிக அளவில் கலப்பதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனியார் பேருந்துகளில் கட்டண உயர்வு வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை
ஈரோடு, ஆக.5- ஈரோடு மாவட்டத்தில் தனியார் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை விடுத்துள் ளார். ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் தனியார் பேருந்துகளில் ரூ.2 முதல் ரூ.7 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான பேருந்து களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த புகாரை யடுத்து, பேருந்துகளில் ஆய்வு செய்யப்பட்டது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் இது குறித்து தெரிவித்து, அரசு உத்தரவு இல்லாமல் பேருந்து கட்டணம் உயர்த்தக்கூடாது என்று தெரிவித்துள்ளோம். அதிக கட்டணம் வசூல் செய்வது கண்டறியப்பட்டால், அபராதம் விதிப்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
பேருந்து - லாரி விபத்தில் 20 பேர் காயம்
சேலம், ஆக.5- சேலம் மாவட்டம், வாழப் பாடியில் இருந்து பயணி களை ஏற்றுக்கொண்டு, வெள்ளியன்று இரவு அரசுப் பேருந்து சேலம் நோக்கி சென்னை தேசிய நெடுஞ் சாலையில் சென்று கொண்டி ருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த சிமென்ட் கலவை இயந்திர லாரி, அரசுப் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் நிலை தடுமாறிய அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை சேலத்தில் அரசு மற்றும் தனி யார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்க
ஈரோடு, ஆக. 5- சாலை பணியாளர்களின் பிரச்சனை களை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என சாலைப்பணியாளர்கள சங்கம் வலியுறுத்தியுள்ளது. சாலை பணியாளர்களிடம் பிடித்தம் செய்த ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். முதுநிலை பட்டியலை முறை கேடாக வெளியிட்டு அரசு வழங்கும் உரிமை களை மறுக்கும் கோபி கோட்ட பொறி யாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டத்தை ஒடுக்க காவல் துறை போட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். ஜனநாயக முறையில் போராடும் தொழிற் சங்க உரிமையைப் பறிக்காதே என மயா னத்திற்கு சென்று சடலங்களிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை சாலைப்பணி யாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. இதனை யடுத்து, திட்டமிட்டபடி வெள்ளியன்று காலை ஊர்வலம் செல்ல முயன்றனர். இதற்கிடையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட மையத்தின் சார்பாக மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து முத்தரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் உடன்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதனடிப்படையில் மாலையில் வரு வாய் கோட்டாட்சியர் தலைமையில், நெடுஞ் சாலைதுறை நிர்வாகம் மற்றும் சாலைப்பணி யர்களிடையே பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில், மேற்கண்ட கோரிக்கைகள் மீது உடனடியாக தீர்வு எட்டப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ச.விஜயமனோகரன், தமிழ்நாடு நெடுங் சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ், கோபி கோட்டத் தலைவர் என்.முருகவேல், செய லாளர் கருப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாணவர் சங்க போராட்ட அறிவிப்பு சரி செய்யபட்ட மின் விளக்குகள்
நாமக்கல், ஆக.5- இந்திய மாணவர் சங்கத்தின் போராட்ட அறிவிப்பு எதி ரொலியாக, ராசிபுரம் பூங்காவிலுள்ள மின் விளக்குகள் சரி செய்யப்பட்டன. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே திருவிக பூங்கா மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இப்பூங்காவிற்கு குழந் தைகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பொழுது போக்கிற்கு வந்து செல்கின்றனர். இப்பூங்காவில் மின் விளக்கு இருந்தும், நீண்ட காலமாக பழுதடைந்து பூங்காவே இருளாக மாறியது. அங்கே உள்ள மரங்களில் கிளைகள் முறிந்து விளை யாடும் குழந்தைகள் மீது விழும் அபாயம் உள்ளது. இதனை சரி செய்யாத ராசிபுரம் நகராட்சியை கண்டித்து இந்திய மாண வர் சங்கம் நாமக்கல் மாவட்டக்குழு சார்பில் தீப்பந்தம் ஏந்தும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இப்போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், நகராட்சி ஊழியர்களால் மின்விளக்கு சரி செய்யப்பட்டது. மேலும், முறிந்து விழும் நிலையில் இருக்கும் மரக்கிளைகள் விரைவில் அப்புறப்படுத்தப்படும் என ராசிபுரம் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட தீப் பந்தம் ஏந்தும் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்ட தாக மாணவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நல்லா படிச்சா விமானத்தில் பறக்கலாம்! நனவாகும் அரசுப்பள்ளி மாணவர்களின் கனவு
கோவை, ஆக.5- அரசுப்பள்ளியில் 100 சதவிகித தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து, மாணவர்களை தன்னார்வலர்கள் உதவியுடன் ஆசிரியர்கள் விமானத்தில் அழைத்து சென்றனர். கோவை மாவட்டம், காங்கேயம்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கடந்த கல்வியாண் டில் காங்கேயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றது. இதனை ஊக்குவிக்கும் விதமாக அப்பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி ஆசிரி யர்கள் இணைந்து அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாண வர்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டது. தற்போது பள்ளியில் பயின்று வரும் 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். ஒருநாள் பயணமாக சென்னை செல்லும் மாணவர்கள், அங்கு தலைவர்களின் நினைவிடங்கள், மெட்ரோ ரயில், அரசு நூலகம் உள்ளிட்டவற்றை பார்வையிடுகின்றனர். இதன் பின் ரயில் மார்க்கமாக கோவை திரும்புகின்றனர். நீண்ட நாள் கனவாக உள்ள விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை தற்போது நிறைவேறியுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
திருநங்கை முகாம்
உதகை, ஆக.5- நீலகிரி மாவட்டத்தில் திரு நங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்ய ஏதுவாக, மாதந்தோறும் வெள்ளி யன்று குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது. அதன்படி ஊட்டி யிலுள்ள சமூக நல அலுவல கத்தில் வருகிற ஆக.11 ஆம் தேதியன்று திருநங்கைகள் குறைதீர்ப்பு முகாம் நடை பெற உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
சிறுவனை தாக்கி செல்போன் பறிப்பு
கோவை, ஆக.5- கோவை, ஆவாரம்பா ளையம் அம்பாள் நகரைச் சேர்ந்தவர் இப்ராஹிம் மகன் முகமத் அமீர் (15). இவர் அப் பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகி றார். பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய முகமத் அமீர் தனது நண்பர்களுடன் பீளமேடு ரயில் நிலையம் அருகே உள்ள காலி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், முகமத் அமீரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ள னர். அவர் இல்லை என்று சொன்னதால் ஆத்திரம டைந்த அந்த கும்பல், முகமத் அமீரை தாக்கி அவரிடமி ருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர். தாக்குதலில் காயமடைந்த சிறுவனை அக்கம்பக்கத்தி னர் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில், பீள மேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவனை தாக்கி செல்போனை பறித்து சென்ற கும்பலை தேடி வரு கின்றனர்.