districts

img

கோவை தொண்டாமுத்தூரில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

கோவை தொண்டாமுத்தூரில்  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.  

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழக முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அந்தந்த மாவட்ட காவல்துறை சார்பாகக் கொடி அணி வகுப்பு நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாகக் கோவை தொண்டாமுத்தூரில் காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் இன்று கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தொண்டாமுத்தூர் சார்பு பதிவாளர் அலுவலகத்திலிருந்து புதுப்பாளையம் பிரிவு வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு அணிவகுப்பு நடைபெற்றது. மாவட்ட காவல்துறையினர்,  ஊர் காவல் படையினர், மத்திய பாதுகாப்பு படையினர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் என 200 பேருக்கு மேற்பட்ட காவல்துறையினர் கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.