பாஜக நிர்வாகி மீது போலீசில் புகார்
சேலம், ஜூன் 27- காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குறித்து, அருவருக்கத்தக்க வகையில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பதிவிட்ட பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை கோரி சேலம் காவல் ஆணையாளர் அலுவல கத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. திரைக்கலைஞர் விஜய், அன்மையில் மாணவ, மாணவி களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலை யில், திமுக, காங்கிரஸ் கூட்டணியில் நடிகர் விஜய்யை இணைக்க தயாராக உள்ளோம் என, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், தனது சமூக வலைத்தளங்களில் காங்கிரஸ் கட்சி குறித்தும், நாடாளு மன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குறித்தும் அவதூறாக இழிவு படுத்தி அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பதிவிட்டிருந் தார். இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் பல் வேறு பகுதியில், பாஜக நிர்வாகியான சுரேசை கைது செய்ய வலியுறுத்தி புகாரளித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட காங்கிரஸ் வர்த்தகர் பிரிவு சார்பில், காங்கிரஸ் கட்சியையும், காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குறித்தும் அவதூறு தெரிவித்த சுரேசை கைது செய்ய வலியுறுத்தி சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.
நாளை பக்ரீத்: திக்கு முக்காடிய கால்நடை சந்தைகள்
தருமபுரி, ஜூன் 27- நாளைய தினம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், காரிமங்கலம் வாரச்சந்தையில் ரூ.3 கோடியே 40 லட்சத்திற்கு ஆடு, மாடுகள் விற்பனையானது. ஒரே நேரத் தில் ஆயிரக்காண வியாபாரிகள் கூடியதால் வாரச்சந்தை திக்கு முக்காடியது. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. பிரசித்தி பெற்ற இச்சந்தையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தி யாவசிய பொருட்கள் மற்றும் விவசாய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஆடு, மாடுகள் விற்ப னைக்கு பிரசித்தி பெற்ற சந்தையாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், வியாழனன்று (நாளை) பக்ரீத் பண்டிகை என்பதால், வழக்கத்தை விட வியாபாரிகளின் கூட்டம் அலை மோதியது. தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங் களிலிருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் வளர்ப்பு கால் நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் வெள்ளாடு, செம்மறியாடு என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள், ஒரு வயது கன்று வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இறைச்சிக்காகவும், கால்நடை வளர்ப்புக்காகவும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். அதன்படி, செவ்வாயன்று ரூ.3 கோடியே 40 லட்சத்திற் கும் மேல் கால்நடை விற்பனை செய்யப்பட்டுள்ளது. 7 கிலோ எடை கொண்ட வெள்ளாடு ரூ.6 ஆயிரம், 10 கிலோ எடை கொண்ட வெள்ளாடு ரூ.12 ஆயிரம் என விற்பனை செய்யப் பட்டன. கன்று குட்டிகள் ரூ.5 ஆயிரம் வரை விற்பனையானது. மாடுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டது. விடியற்காலை 5 மணி முதல் 9 மணி வரை ஆடு, மாடுகள் விற்பனை களைகட்டியது.
ரியல் எஸ்டேட்காரரிடம் ஏமாந்த பயனாளி மார்க்சிஸ்ட் கட்சி தலையீட்டால் நிலம் மீட்பு
ஈரோடு, ஜூன் 27- ரியல் எஸ்டேட் கும்பலிடம் ஏமாந்த வரின் நிலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீட்டால் மீட்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், திண்டல் பகுதி யைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது சகோதரர் கோவிந்தராஜன். இவர்கள் இருவரும் பவானி வட்டம், சலங்க பாளையம் கிராமத்தில் அன்பு நகர் எனப் பெயரிடப்பட்ட பகுதியில் தலா ஒரு வீட்டுமனை வாங்கினர். 1997 ஆம் ஆண்டு வாங்கப்பட்டதற்கான பத்திர மும் இவர்கள் பெயரில் உள்ளன. அந்த வீட்டுமனையில் வீடு கட்டவோ, வேறு பயன்பாட்டிற்கோ அதன் உரிமை யாளர்கள் உட்படுத்தவில்லை. நாள டைவில் இதனையறிந்த பவர் ஏஜென்ட் நபர் அதேநிலத்தை வேறு ஒருவ ருக்கு விற்றுவிட்டார். அப்பகுதியின் பெயரையும் ஓம்சக்தி நகர் என மாற்றி விட்டார். இதனை ரவிச்சந்தரன், கோவிந்தராஜ் சகோதரர்கள் அறிய வில்லை. இந்நிலையில், கடந்தாண்டு அந் நிலத்தினை விற்றுவிடுவது என மேற் ற்கண்ட சகோதரர்கள் முடிவு செய்தனர். அதுகுறித்த பணியில் ஈடுபட்ட போது தங்கள் பெயரில் நிலம் இல்லை என்பது தெரியவந்தது. இவ்வாறு ஏமாற்றப் பட்ட சகோதரர்கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்று முறையிட்டனர். இதனைத்தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலில், தங்களிடமிருந்த ஆவ ணங்களைக் கொண்டு அளந்து அத்து காட்டுமாறு இசலான் செலுத்தினர். இதன்படி சர்வேயர் மற்றும் வரு வாய்த்துறையினர் அளந்து அத்து காட்ட வேண்டும். ஆனால். கிராம நிர் வாக அலுவலரும், வட்டாட்சியரும் அப்படி ஓர் இடம் இல்லை என தவறான தகவலை அளித்தனர். இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியரிடம் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில் பொது விசாரணை செய்ய வேண்டும் என்றும், விசாரணையின்போது தங்க ளுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. அத்துடன் மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளையும் இதில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என கேட்கப்பட்டது. இதற்கு மேலும் இவர் களை ஏமாற்ற முடியாது என்பதை யறிந்து திருச்செங்கோடு அருகே சீதா ராம்பாளையத்தினருக்கு விற்ற நிலத்தை மீளக் கிரையம் பெற்றனர். அதன்பிறகு மீண்டும் ரவிச்சந்திரன் மற்றும் அவரது சகோதரர் கோவிந்த ராஜனுக்கு கடந்த 16 ஆம் தேதி வீட்டு மனைக்கான நிலத்தை அளந்து, அத்துக் காட்டி கிரையம் செய்து கொடுத்தனர். இவ்வாறு சுத்த கிரய பத்திரத்தில் கையொப்பம் செய்துள்ளவர் பவானி சட்டமன்ற உறுப்பினர் கே.சி.கருப்பண்ணன் (அதிமுக) என்பது குறிப்பிடத்தக்கது.
கடன் வலையில் சிக்கிய மகன்: பெற்றோர் தற்கொலை
கடன் வலையில் சிக்கிய மகன்: பெற்றோர் தற்கொலை திருப்பூர், ஜூன் 27 - திருப்பூரில் மகன் வாங்கிய கடன் தொகையைக் கேட்டு பெற்றோர்களை கடன் கொடுத்தோர் நச்சரித்ததால், தாய், தந்தை இருவரும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர். திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவரது மனைவி அமலோற்பவமேரி. இவர் களது மகன் சார்லஸ். பனியன் நிறுவனம் நடத்துவதற்காக பல் வேறு இடங்களில் ரூ.15 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் சார்லசிடம் பணம் கேட்க வந்ததால், அவர் கடனை திரும்பச் செலுத்த முடியா மல், இங்கிருந்து வீரபாண்டி பகுதியில் குடியேறிச் சென்றுவிட் டார். இதற்கிடையே மகனுக்கு கடன் கொடுத்தோர், சார்ல சின் தந்தை அலெக்சாண்டரிடம் பணம் கேட்டு நச்சரித்துள் ளனர். இதனால் மனமுடைந்த அலெக்சாண்டரும், அவரது மனைவி அமலோற்பவமேரியும் சேர்ந்து விஷம் குடித்து தற் கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து, திருப் பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேவை குறைப்பாட்டால் இழப்பீடு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
நாமக்கல், ஜூன் 27- கடனை செலுத்திய பின்னரும் ஆவணங்கள் வழங்காத தால் ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க வங்கிக்கு, நாமக்கல் நுகர் வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரியில் வசிக்கும் சுஜித் என்பவரின் தந்தை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கனரா வங்கியில் கடந்த 2004 ஆம் ஆண்டு வீடு கட்டுவதற்காக ரூ.5 லட்சம் கடன் பெற்றுள் ளார். இந்நிலையில், சுஜித்தின் தந்தை கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும், தாயார் செப்டம்பர் மாதத்திலும் இறந்து விட்டனர். இதன்பின் 2013 ஆம் ஆண்டு தந்தை பெற்ற கடனுக் காக சுஜித் ரூ.2 லட்சம் வங்கிக்கு செலுத்தி உள்ளார். இதைய டுத்து, 2016 ஆம் ஆண்டு வங்கியில் சமரச ஒப்பந்தப்படி ரூ.8 லட்சம் செலுத்தி கடனை முடித்துள்ளார். இந்நிலையில், கடன் முழுவதையும் செலுத்திய பின்னர், அசல் ஆவணங்களை பலமுறை சுஜித் வங்கியில் கேட்டுள் ளார். ஆனால், வங்கி திருப்பி தராததால், அசல் ஆவணங் களை கேட்டு கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், திங்களன்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ.ராமராஜ், உறுப்பினர் ஏ.எஸ்.ரத்தினசாமி முன்னிலையில் தீர்ப்பு வழங்கினார். இதில், கடன் செலுத்தப்பட்டு தற்போது வரை 82 மாதங் கள் கடந்தும் வங்கி நிர்வாகம் அசல் ஆவணங்களை வாடிக் கையாளருக்கு வழங்காதது சேவை குறைபாடு என நுகர் வோர் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. வங்கியின் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூ.5 லட்சத்தை வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைபோல் நாமக்கல் - மோகனூர் சாலையில் வசிக்கும் பி.கே.வெங்கடாஜலம், மனைவி வி.சுசீலா என்பவர் நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந் தியா வங்கியில் கடனை கடந்த 2015 ஜனவரி மாதத்தில் செலுத் திய பின்னரும் ஆவணங்களை ஓராண்டு கழித்துதான் வங்கி அசல் ஆவணங்களை திருப்பி வழங்கியது என்று தாக்கல் செய்திருந்த வழக்கில் வங்கி நிர்வாகம் ஆவணங்களை திருப்பி வழங்க ஏற்பட்ட கால தாமதத்திற்கு இழப்பீடாக ரூ.1 லட்சத்தை நான்கு வார காலத்துக்கு வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது
தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து 3 மாணவர்கள் காயம்
ஈரோடு, ஜூன் 27- பவானி – அந்தியூர் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான தில், 3 மாணவர்கள் காயமடைந்தனர். ஈரோடு மாவட்டம், திண்டல், வள்ளி புரத்தான்பாளையத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வாகனத்தில் வழக்கம்போல் செவ்வா யன்று காலை பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. ஈரோடு, கருங் கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் வாகனத்தை ஓட்டி வந் துள்ளார். இந்த வேனில் உதவியாளர் சசிகலா உட்பட 14 மாணவர்கள் சென்று கொண்டிருந்தனர். பவானி - அந்தியூர் சாலையில் வந்து கொண்டிருந்த வாக னம், அந்தியூர் பிரிவு பகுதியில் எதிர் பாராத விதமாக திடீரென சாலையின் நடுவிலிருந்த தடுப்பு மீது மோதி கவிழ்ந் தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பவானி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அதிகாரிகள், விபத்தில் சிக்கிய மாணவ, மாணவிகளை பத்திரமாக மீட்டனர். இவ்விபத்தில் பவானி, வர்ணபுரம், 5 ஆவது வீதியைச் சேர்ந்த மாணவி அனுஸ்ரீ (13), பவானி பழனிபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி தக்க்ஷா நிதி (11), வாய்க்கால்பாளையம் பகுதி யைச் சேர்ந்த சிறுவன் ஆகவா (4) ஆகிய 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதைய டுத்து 3 பேரும் பவானி அரசு மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பின், தனியார் மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து பவானி போலீசார் ஓட்டுநர் கார்த்தியிடம் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
அரசு மேல்நிலைப்பள்ளியின் அவல நிலை திரும்பி பார்க்குமா? பள்ளி கல்வித்துறை
கோவை, ஜூன் 27- கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேவை யான அடிப்படை வசதிகளை அதிகாரிகள் உடனடியாக செய்து தர வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ள னர். கோவை மாவட்டம், ஆனைமலையை அடுத்த கோட்டூர், மலையாண்டிபட்டினத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. 400க்கும் மேற்பட்டோர் பயிலும் இப்பள்ளியில் கடந்த வெள்ளியன்று சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் உடல் நலம் குன்றி 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள சத்துணவு கூட் டத்தில் பல்வேறு குறைகள் உள்ளதாக பெற்றோர்கள் சரமாரி யாக புகார்கள் தெரிவித்தனர். மேலும், இப்பள்ளியில் உள்ள சமையல் கூடத்தில் நான்கு மாதங்களுக்கு மேலாக மின் விளக்குகள் எரியாத பட்சத்திலும், குழந்தைகளுக்கு உணவு சமைத்து பரிமாறப்படுகிறது. இங்குள்ள கழிப்பிடங்கள் மோசமான நிலையில் இருப்பதால், துர்நாற்றம் அதிகள வில் வீசுகிறது இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், சுகாதாரமின்றி குடிநீர் தொட்டி இடிந்த நிலையில் உள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அரசு உத்தர விட்டது. ஆனால், இப்பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு செய்த தாக தெரியவில்லை. இங்குள்ள கழிப்பிடம், பொது கழிப் பிடத்தைவிட மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, இப்பள்ளியில் பயிலும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், விரைவாக பள் ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
சேலம், ஜூன் 27- காவிரி கரையோர பகுதி களில் மழை குறைந்து வருவ தால், மேட்டூர் அணைக்கு வரும் நீரானது குறைந்து காணப்படுகிறது. அதன்படி, திங்களன்று அணைக்கு வரும் நீரின் அளவு 176 கன அடியாக இருந்த நிலையில், செவ்வாயன்று காலை நில வரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு 126 கனஅடியாக குறைந்துள்ளது. மேலும், குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.டெல்டா பாசனத்திற்காக 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. இதுபடிப்படி யாக அதிகரிக்க வாய்ப்புள் ளதாக கூறப்படுகிறது.