districts

img

கனிம வள கொள்ளை: அதிமுக பிரமுகர் மீது போலீசில் புகார்

ஈரோடு, ஜன.4- கனிம வள கொள்ளையில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியு றுத்தி தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தனர். அப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஈரோடு மாவட் டம், பெருந்துறை வட்டம், சென்னிமலை ஊராட்சிக்குட்பட்ட எக்கட்டாம்பாளையம் கிராமம். இப்பகுதியைச் சேர்ந்த ப. கோபாலகிருஷ்ணன் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் அதிமுக ஒன்றிய செயலாளராகவும், 5 ஆண்டுகள் சென்னிமலை ஒன் றிய பெருந்தலைவராகவும், தற்போது ஒன்றியக்குழு உறுப்பி னராகவும் செயல்பட்டு வருகிறார். இவரது மனைவி பானு  கோபால் பெயரில் கல்குவாரி கடந்த 2018 முதல் இயங்கி வரு கிறது. இந்த குவாரிக்கு அருகில் வரலாற்று சிறப்புமிக்க மாமாங்கள் குளம் உள்ளது. இக்குளத்திற்குச் செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட இந்த  பாதையில் கனிம கொள்ளை நடப்பதாக புகார் தெரிவிக்கப் பட்டது. மேலும், கல்குவாரிக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட 42 மீட்டர் ஆழத்தில் கனிமங்கள் சட்ட விரோதமாக எடுக் கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆக்கிரமிப்பு மற்றும் சட்ட விரோமாக கனிமங்கள் எடுத்ததற்கு ரூ.16 கோடியே 35 லட் சடத்து 32 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கலாம். எனவே, தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பாதை ஆக்கிரமிப்பு, கனிமங்களை வெட்டி திருடியது, பொது சொத்தை சேதப்படுத்தி அழித்த கோபாலகிருஷ்ணன் மீது  குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பா ளர் இரா.சா.முகிலன் தலைமையில் கல்குவாரி எதிர்ப்பு  இயக்கம் மற்றும் சென்னிமலை பூப்பறிக்கும் மலை பாது காப்பு இயக்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.