districts

img

டேக்சி ஓட்டுநர் மீது போலீசார் தாக்குதல் ஆட்சியர் அலுவலகத்தில் சிஐடியுவினர் தர்ணா

கோவை, ஏப்.4– டேக்சி ஓட்டுநரை கடுமையாக தாக்கிய கோவை சரவணம்பட்டி போலீசார் மீது  நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட வரின் மனைவி, சிஐடியுவினர் தலைமை யில் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட டேக்சி ஓட்டுநரான முருகன் என்பவரின் மனைவி சந்தியா என்பவர் கூறுகையில், கோவை கணபதி புதூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எனது கணவர் முருகன் கால் டேக்சி ஓட்டுநராக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில், செவன் கேப்ஸ் என்கிற தனியார் நிறுவன கால் டேக்சி உரிமையாளர் பிரபு என்பவர் கடந்த மாதம் 28 ஆம் தேதி  சரவணம்பட்டி காவல் நிலையத்தில் முருகன் மீது ஒரு பொய் புகாரை கொடுத்துள்ளார்.  இதற்காக போலீசார் முருகனை விசா ரணைக்கு வரவழைத்து ஒரு நாள் முழுவ தும் காவல் நிலையத்தில் வைத்து கடுமை யாக தாக்கியுள்ளனர். இதனால் அவர்  மயக்கமடைந்துள்ளார்.

பிறகு என்னை  காவல் நிலையத்திற்கு வரச்சொல்லி  மயக்க நிலையில் இருந்த எனது கணவரை ஆட்டோவில் அனுப்பி வைத்த னர். போலீசார் அடித்ததால் மூச்சு விட  முடியாமல் அவதிப்பட்ட எனது கணவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போதுதான்  வீடு திரும்பினார். ஆகவே, எந்த தவறும் செய்யாத எனது கணவரை விசாரணை என்ற பெயரில் கடுமையாக தாக்கியும், பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுவோம் என மிரட்டிய  சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீசார் மீது சட்டப்பட்டியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தாக தெரிவித்தார்.  முன்னதாக, கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் சிஐடியு மாவட்ட செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சிஐடியு சாலை போக்குவரத்து சங்கத்தினர் பாதிக்கப்பட்ட டேக்சி ஓட்டுனருக்கு நீதி கேட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை யடுத்து காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதன்பின்னர்  கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.