கோவை, அக். 2– பத்திரிகையாளர் அ.அருள்குமார் எழுதிய “கிளை யொன்றிலிருந்து மேலெழும் பெரும் பறவை” கவிதை நூல் வெளியீட்டு விழா கோவையில் சனியன்று நடைபெற்றது. பத்திரிகையாளரும், கவிஞருமான அ. அருள்குமார், கிளையொன்றிலிருந்து மேலெழும் பெரும் பறவை என்ற கவிதை நூலை எழுதியுள்ளார். இந்நூல் வெளியிட்டு விழா கோவை பூசாரிபாளையத்தில் நடைபெற்றது. பூவை சமூக நல அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு ம.இளங் கோவன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் கவிதை நூல் குறித்து பலரும் உரையாற்றினர். நிறைவாக நூலாசிரியர் கவி ஞர் அ.அருள்குமார் ஏற்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.