districts

img

புத்தகங்கள் வாசிப்பதை ஊக்குவிக்க வேண்டும்

தருமபுரி, ஜன.2- பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்க ளிடையே புத்தகங்கள் வாசிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தருமபுரி மாவட்டம், அரூரில் தகடூர்  புத்தகப் பேரவை, அரூர் அரிமா சங்கம், அழகு அரூர் காப்போம் அறக் கட்டளை சார்பில் புத்தகங்களுடன் புத் தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற் றது. அழகு அரூர் காப்போம் அறக்கட்ட ளையின் தலைவர் அ.வே.சின்னசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச் சியில், ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ எனும் தலைப்பில் பட்டிமன்ற பேச்சாள ரும், எழுத்தாளருமான மதுக்கூர் ராம லிங்கம் பேசியதாவது, பள்ளி மற்றும்  கல்லூரி மாணவர்களிடம் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் நாளுக்கு நாள்  குறைந்து வருகிறது. நாம் அனைவரும் அனைத்து நாடுகளுக்கும் செல்ல முடி யாது. பழங்கால வாழ்க்கை வரலாறு களை நேரில் பாக்க முடியாது.

ஆனால், பல்வேறு புத்தகங்களை வாசிப்பதினால் ஒவ்வொரு நாடுகள் குறித்தும், பழங்கால வாழ்க்கை முறை கள் குறித்தும் நம்மாமல் அறிந்து கொள்ள முடியும். எனவே, பள்ளி மற் றும் கல்லூரி மாணவர்களிடையே புத்த கங்கள் வாசிக்கும் பழகத்தை ஆசிரியர் கள் ஊக்குவிக்க வேண்டும். கொரோனா நோய் தொற்றால் நாம்  அனைவரும் வீடுகளில் முடங்கி கிடந் தோம். இந்த பேரிடர் நிலையில், தன்னம் பிக்கையுடன் வாழ்க்கையில் எவ்வாறு வெற்றிப் பெறுதல்  என்பதை நாம் கற் றுக்கொண்டோம். ஒவ்வொரு மனித னுக்கும் தன்னுடைய நலனும், பொது  நலனும் மிக அவசியம், என்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் தக டூர் புத்தகப் பேரவை தலைவர் இரா.சிசு பாலன், செயலாளர் இரா.செந்தில்,  கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலாளர் கே.சின்னக்கண்ணன், மருத்துவர் வே.கோவிந்தராஜ், அழகு அரூர் காப்போம் அறக்கட்டளையின் செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன், கவி ஞர் ஆதிமுதல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்ட இளை ஞர்கள், கவிஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கவிதை, கட்டுரைகள், வரலாறு, இலக்கிய நூல்கள், பொது அறிவு புத்தகங்கள், அரசியல் தலை வர்களின் வாழ்க்கை வரலாறு உள்பட 100க்கும் மேற்பட்ட தலைப்புகளில் இடம் பெற்ற  ஆயிரக்கணக்கான புத்த கங்களை வாங்கி சென்றனர்.