districts

ஜன.26-ல் திருப்பூர் மாவட்டத்தில் நூறு மையங்களில் தேசம் காப்போம் உறுதிமொழி: தொழிற்சங்கங்கள் முடிவு

திருப்பூர், டிச.31- ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத் தில் திருப்பூர் மாவட்டத்தில் நூறு மையங் களில் தேசம் காப்போம், மக்களைக் காப் போம் என உறுதிமொழி ஏற்பதென அனைத் துத் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள் ளன. திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிற் சங்க நிர்வாகிகள் கூட்டு கூட்டம் வியாழ னன்று பி.என்.ரோடு ஏஐடியுசி பனியன் சங்க அலுவலகத்தில் ஏஐடியுசி மாவட்டத் தலை வர் சி.பழனிச்சாமி தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ், சிஐடியு கட்டு மானத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி.குமார், ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் என்.சேகர், எல்பிஎப் மாவட்ட துணை தலைவர் ரங்கசாமி, எல்பிஎப்  மின்சார ஊழியர் சங்கம் செயலா ளர் சரவணன், ஐஎன்டியூசி மாவட்ட செய லாளர் சிவசாமி, மாவட்ட தலைவர் அ.பெரு மாள், எச்எம்எஸ் மாநிலச் செயலாளர் முத் துச்சாமி, துணைச் செயலாளர் கவுதம் ஈஸ் வர், எம்எல்எப் மாவட்ட செயலாளர் மு. சம்பத், எம்எல்எப் பனியன் சங்க செயலா ளர் மனோகர் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.

 இக்கூட்டத்தில், ஒன்றிய பாஜக அரசின் தவறான தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேச விரோத கொள்கைகள் காரண மாக நம் நாடு கடும் நெருக்கடியை சந்தித்து  வருகிறது. நூறு ஆண்டுகள் போராடி பெற்ற தொழிலாளர் உரிமைகளை முற்றிலும் பறித்து தொழிலாளர்களை நவீன அடிமை களாக மாற்றும் நடவடிக்கையாக 44 தொழி லாளர் சட்டங்களை 4 சட்டத் தொகுப்புக ளாகச் சுருக்கி உள்ளது. மேலும் பணமாக் கல் என்ற பெயரில் பொதுத் துறைகளை அடி மாட்டு விலைக்கு கார்ப்பரேட் கம்பனிக ளுக்கு விற்று வருகிறது. பொதுத்துறை நிறு வனங்களை தனியாருக்குத் தாரை வார்க் கும் முடிவை அராஜகமாக நிறைவேற்று கின்றனர். சமூக நல்லிணக்கத்தை சிதைக் கும் நோக்கத்தில் ஹரித்துவாரில் துவங்கி பல இடங்களில் ஆட்சியாளர்கள் மதவெறி யுடன் சிறுபான்மை மக்களை குறிவைத்து தாக்குவது பற்றி பேசி மக்கள் மத்தியில் அச் சத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.  

எனவே, 12 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி வரும் பிப்ரவரி 23, 24 ஆகிய இரண்டு நாட்கள் நாடு தழுவிய பொது வேலைநிறுத் தம் நடத்துவது என்று அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு ஏற்ப, திருப் பூரில் இரு நாள் வேலைநிறுத்தப் போராட் டத்தை முழு வெற்றி பெறச் செய்ய ஜனவரி 7ஆம் தேதி மாவட்ட அளவில் மாநாடு நடத்து வது, ஜனவரி 26 குடியரசு நாளில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் 100 மையங்களில், நாட்டைக் காப்போம், மக்களைக் காப்போம் என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்துவது என்றும் முடிவு செய்யப் பட்டது. அதை தொடர்ந்து பிரச்சார இயக்கம் மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட் டது.