திருப்பூர். ஏப். 14 - இந்திய அரசியல் சட்டத்தின் சிற்பி, டாக்டர் அம்பேத்கரின் 134 ஆவது பிறந்த நாள் விழாவை முன் னிட்டு அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய சிற்பி புரட்சியாளர் அம்பேத்கரின் 134 ஆவது பிறந்த நாளில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருப்பூர் மாவட் டக் குழு சார்பில், திருப்பூர் காம ராஜ் சாலை பூ மார்க்கெட் அருகில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட் டது. மேலும், இந்திய அரசியல மைப்பை சீர்குலைக்கு பாசிச பாஜகவை விரட்டியடிப்போம், தேசத்தின் மாண்மை பாதுகாப் போம் என்கிற உறுதியேற்பு நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட் டத் தலைவர் ச.நந்தகோபால் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி.கே.கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாநகரச் செயலாளர் த. ஜெயபால், சிஐடியு மாவட்ட நிர் வாகி பி.பாலன், ததீஒமு மாவட்ட துணைத் தலைவர் சண்முகம், துணைச் செயலாளர் ரமேஷ், மாற் றுத் திறனாளிகள் சங்க தெற்கு மாநகரச் செயலாளர் ந.சஞ்சீவ் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோன்று, ஊத்துக்குளி ஆர்.எஸ். பேருந்து நிறுத்தம் அருகில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப் பட்டது. இந்த நிகழ்வில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் சரவணன், மாவட்டப் பொருளாளர் பழனி சாமி, திமுக தெற்கு ஒன்றியச் செய லாளர் ஈஸ்வரமூர்த்தி, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் சரஸ் வதி, இந்திய ஜனநாயக வாலி பர் சங்க தாலுகா செயலாளர் பால முரளி உட்பட திரளாக கலந்து கொண்டனர். மேலும், ஊத்துக்குளி தாலுகாவில் ஊத்துக்குளி ஆர்.எஸ்., நடுப்பட்டி, எம். தொட்டிபாளையம்,பல்லகவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் அண்ணல் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கோவை கோவை மாநகரம், புலியகு ளத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அம்பேத் கர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்டத் தலைவர் யு.கே.சிவஞானம், மாவட்ட துணைச் செயலாளர் த.நாக ராஜ், திராவிட கழகத்தின் மாந கரச் செயலாளர் வீரமணி, சிஐ டியு டி.மாரிமுத்து, கே.த.நாகராஜ், நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா வில் அமைந்திருக்கும் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ் விற்கு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்டச் செயலாளர் மா. அண்ணாதுரை தலைமை வகித் தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.கோமதி, மாவட்டக் குழு உறுப் பினர்கள் பி.சுந்தரராஜன், ராஜா, தமுஎகச மாவட்டத் தலைவர் மு. சங்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, அதே இடத் தில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.