திருப்பூர், ஜூன் 12 - மோடி அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைக ளுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்ப டுத்துவது என்று மத்திய தொழிற்சங் கங்கள் நடத்திய ஆயத்த மாநாட்டில் உறுதியேற்கப்பட்டது. திருப்பூர் - அவிநாசி சாலை கருப்பரா யன் கோயில் மண்டபத்தில் திங்களன்று மாலை நடைபெற்ற இம்மாநாட்டிற்கு எல்பிஎப் நிர்வாகி ரங்கசாமி தலைமை வகித்தார். இதில் எம்எல்எப் செயலாளர் மு.சம்பத், எச்எம்எஸ் மாவட்ட செயலா ளர் எஸ்.முத்துசாமி, ஐஎன்டியுசி செய லாளர் அ.சிவசாமி, சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் டி.குமார், ஏஐடியுசி பொதுச் செயலாளர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் மோடி அரசின் கொள்கை களை கண்டித்துப் பேசினர். இதில் சிஐடியு மாவட்ட தலைவர் சி.மூர்த்தி, சுமைப்பணி சங்க மாவட்ட தலைவர் எம்.ராஜகோபால், ஏஐடியுசி பனியன் சங்கச்செயலாளர் என்.சேகர் உட்பட சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஐ என்டியுசி, எச்எம்எஸ், எம்எல்எப் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.