சேலம், ஏப்.29- ஏற்காடு மலைப்பாதையில் உள்ள குரங்குகளின் தாகத்தை போக்க ஆங் காங்கே தண்ணீர் தொட்டிகள் வைக்கப் பட்டு, தண்ணீர் நிரப்பப்பட்டு வருகி றது. சேலம் மாவட்டம், ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார மலை கிராமங்களில் கடும் வெயில் கொளுத்துகிறது. இத னால் மரம், செடி, கொடிகள் காய்ந்து இலைகள் உதிர்ந்தும் காணப்படுகிறது. இதனிடையே, கடும் வெயில் காரண மாக வனப்பகுதியிலிருந்து விலங்குகள் கிராமங்களுக்கும் வரத் தொடங்கியுள் ளது. இந்நிலையில், ஏற்காடு மலைப் பாதையில் உள்ள குரங்குகள், தண்ணீ ருக்கு மிகவும் சிரமம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த வனத் துறையினர், குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுத்து வருகின்றனர். இது தவிர தன்னார்வ அமைப்புகளும் தங்க ளது பங்களிப்பை செலுத்தி வருகின்ற னர். இந்நிலையில், திங்களன்று சமூக ஆர்வலர்கள் பலர் ஒன்றிணைந்து, ஏற் காடு மலைப்பாதையில் பெரிய அளவி லான சிமெண்ட் தொட்டிகள் வைத்து அதில் தண்ணீர் நிரப்பினர். இந்த பெரிய அளவிலான தொட்டிகள் மலைப்பாதை யிலும், காட்டுப் பகுதிகளிலும் வைக்க உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித் தனர்.