நாமக்கல், ஜூலை 15- கொல்லிமலையில் அன்னாசி பழம் அறுவடை துவங்கியுள்ள நிலையில், போதிய விலை கிடைக்காததால், விலை உயர்வுக்காக விவசாயிகள் காத்திருக் கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. அந்த மலையில் 14 ஊராட்சி பகுதிகள் உள்ளன. அதில் குறிப்பாக அரியூர் நாடு மற்றும் குண்டூர் நாடு ஆகிய 2 ஊராட்சி பகுதிகளில் மட்டும் அன்னாசி விளைந்து வருகிறது. மற்ற பகுதிகளில் மற்ற பழங்கள் விளைந்து வருகிறது. மேற்குறிப்பிட்ட 2 ஊராட்சி பகுதிகளில் அன்னாசி பழத்திற்கு ஏற்ற தட்பவெப்ப நிலை நிலவுவதால், அங்கு நாட்டு ரகம் மற்றும் கியூ ரக அன்னாசி ஆகியவை விளைந்து வருகின்றன. அதில் குறிப் பாக, நாட்டு ரக அன்னாசி பழங்களே அதிகளவில் விளைந்து வருகிறது. சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அன் னாசி பழம் சாகுபடி செய்யப்பட்டுள் ளது. ஒவ்வொரு வருடமும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 3 மாதங்க ளுக்கு அன்னாசி பழம் சீசன் நடந்து வரு கிறது. அப்பகுதிகளில் அறுவடை செய் யப்படும் அன்னாசி பழங்கள் வாகனங் கள் மூலமாக அங்குள்ள சோளக்காடு, தெம்பலம் ஆகிய சந்தை பகுதிகளுக்கு கொண்டு வந்து விற்கப்படுகிறது. சந்தைகளிலிருந்து மூட்டை, மூட் டையாக லாரிகளில் ஏற்றப்பட்டு வெளி மாவட்ட, மாநிலங்களுக்கு விற்பனைக் காக வியாபாரிகள் கொண்டு செல்கின்ற னர். கடந்தாண்டு ஒரு மூட்டை அதிக பட்ச விலையாக ரூ.700 முதல் ரூ.800 வரை விற்பனையானது. ஆனால், இந் தாண்டு தற்போது தொடக்கத்தில் ரூ.250 முதல் ரூ.500 வரையில் விற்பனை ஆகி வருகிறது. வருகிற வாரங்களில் விலை யேற்றம் வந்தால் தான் அன்னாசி சாகு படி செய்த விவசாயிகளுக்கு எதிர் பார்த்த லாபம் கிடைக்கும். இதனால் விலை உயர்வுக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.