திருப்பூர், மார்ச் 23- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஏராளமானோர் தங்கள் குறைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியர் எஸ்.வீனீத்திடம் வழங்கினர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் ஆட் சியர் சு.வினீத் தலைமையில் திங்கள்கிழமை அன்று நடைபெற்றது. இதில் மாற்றுத்திற னாளி மூர்த்தி (41), உடலில் மண்ணெண் ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய் யும் முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கிருந்த போலீசார், அவர் மீது தண் ணீரை ஊற்றி அவரிடம் விசாரணை மேற் கொண்டனர். அப்போது, காங்கயம் வட்டம் குட்டப்பாளையத்தில் நான் உட்பட 31 பேர், 2018 ஆம் ஆண்டு 1.87 ஏக்கரில் நிலம் வாங்கி னோம். அதில் நான் மட்டும் ரூ. 18 லட்சம் செலவு செய்து வீடு கட்டினேன். 30 பேர் கட்ட வில்லை.
இந்த நிலையில் உரிய வீட்டுமனை அங்கீகாரம் இல்லை என்று சொல்லி நான் கட்டிய வீட்டை இடிக்க நடவடிக்கை மேற் கொண்டனர். நான் கூலித்தொழிலாளி என்னை போல் பலரும் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தில் இந்த இடத்தை பெற்றுள்ளோம். நாங்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வர்கள் அங்கு வசிக்கும் ஆதிக்க சாதியினர் இடையூறாக உள்ளனர். ஊராட்சி மூலம் வீட்டை இடிப்பதற்கான பணிகளையும் மேற் கொண்டுள்ளனர். இது தொடர்பாக காங்க யம் போலீசாரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு மகள் மற்றும் மகன் தற்போது அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். மனைவி விவசாய கூலித் தொழிலாளி. எங்கள் நிலை கருதி, நாங்கள் பெற்ற இடத்துக்கு ஊராட்சி சார்பில் உரிய வீட்டுமனை அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்று அவர் கூறினார். மக்கள் நீதி மய்யத்தின் மத்திய மாவட்ட செயலாளர் ஜீவா மற்றும் வடமேற்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கொடுத்த மனுவில்: மக்கள் தரும் வரிப்பணத்தில் இயங்கும் அரசு நிர்வாகமா னது துரிதமாக செயல்பட்டு அரசின் சேவை களை எளிய முறையிலும், விரைவாகவும் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். பல் வேறு காரணங்களுக்காக அரசு அலுவல கங்களுக்கு வருகிற பொதுமக்கள் அலைக் கழிக்கப்படுகிறார்கள்.
லஞ்சம் கொடுத்து தான் அரசு சேவைகளை பெற முடியும் என்ற நிர்ப்பந்தத்திற்கு பொதுமக்கள் ஆளாக்கப்படுகிறார்கள். நேர்மையாக செயல்பட விரும்பும் அரசு அலுவலர்கள் கூட நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறார் கள். எனவே தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்தி, அரசு சேவைகள் அனைத்தும் காலதாமதம் இன்றி, லஞ்சம் இல்லாமல் நடக்கும் வகை யில் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றனர். பல்லடம் புத்தரச்சல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில்: இப்பகுதி யில் ஏராளமானவர்கள் வசித்து வருகி றோம். இந்நிலையில் வீட்டுமனை திட்டத் தில் சிவக்குமார் என்பவர் மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் தவணை செலுத்தினால் புத்தரச்சல் பகுதியில் வீட்டுமனை கிரையம் செய்து தரு வதாக கூறினார். இதனை நம்பி 205 பேரும் தலா ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வீதம் பணம் செலுத்தினோம். ஆனால் இது வரை எங்களுக்கு இடத்தை கிரையும் செய்து கொடுக்காமல் மோசடி செய்து வரு கிறார். மேலும், பணத்தை கொடுக்காமலும் இருந்து வருகிறார். எனவே எங்களது பணத்தை பெற்று தர வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் இடத்தை கிரையம் செய்து கொடுப்பதற்கான நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், திருப்பூர் சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட் பட்ட பகுதி பட்டியல் பிரிவு அருந்ததியர் சமூக மக்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்துடன் அங்கு வசித்து வரு கின்றனர்.
இந்நிலையில் அந்த பகுதி நீர் நிலை புறம்போக்கு பகுதி என்பதால், அங்கு வசித்து வருகிற பொதுமக்கள் உடனே அந்த பகுதியை காலி செய்ய வேண்டும் என நீர்வளத்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது. எனவே இந்த பகுதியை நத்தமாக மாற்றி அங்கு வசித்து வருகிற பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர். அவினாசிலிங்கம்பாளையம் பாளை யக்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதி யில் தென்வடலாக செல்லும் அவினாசி ஊராட்சி ஒன்றிய தார் சாலையில் மழை நீர் செல்வதற்காக பாலம் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. கிழக்கு பகுதியில் இருந்து 10 ஏக்கருக்கு மேற்பட்ட பகுதியில் இருந்து வரும் மழைநீர் முழுவதும் இந்த பாலத்தின் வழியாக தான் செல்ல வேண்டும். ஆனால் இதனை தனியார் ஒருவர் கல், மண் போட்டு அடைத்து வைத்துள்ளார். எனவே இதனை அகற்ற வேண்டும் என்றனர். மடத்துக்குளம் அரியநாச்சிபாளை யத்தை சேர்ந்த அர்ஜூனன் என்ற விவசாயி கொடுத்த மனுவில்: எனக்கு சொந்தமாக அரியநாச்சிபாளையத்தில் 3 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நில புரோக் கர் ஒருவர் மூலம் திருப்பூரை சேர்ந்த ஒருவ ருக்கு 1.22 ஏக்கர் நிலத்தை கிரையம் செய்து கொடுத்தேன். இதற்காக முன்பணம் ரூ.3 லட்சம் கொடுத்தனர். ஆனால் இதுவரை மீதி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருகி றார்கள். மேலும், நிலத்தின் தாய் பத்திரத்தை வங்கியில் வைத்து கடனும் பெற்றுள்ளனர். இதனால் என்னால் மீதியுள்ள நிலத்தை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே நிலம் கிரையம் செய்து கொடுத்ததற்கு உரிய பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எனது நிலத் திற்கான தாய் பத்திரத்தையும் மீட்டுக்கொ டுக்க வேண்டும். என்றார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அர்ஜூனன் தர்ணாவில் ஈடுபட்டார்.