கோவை, மே 12- தமிழகத்தில் உயர்த்தப்பட் டுள்ள சொத்து வரி உயர்வை மறு பரிசீலினை செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் மனு அளிக்கும் இயக்கத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு அறிவித்த சொத்து வரி உயர்வை கைவிடக் கோரி தமிழகம் முழுவதும் மாந கராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி மன்ற அலு வலகங்களில் மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக கோவை பெரிய நாயக்கன் பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் சிபிஎம் பேரூ ராட்சி மன்ற உறுப்பினர் சிவராஜ் தலைமையில் நடைபெற்ற மனு அளிக்கும் இயக்கத்தில், கட்சி யின் முன்னணி நிர்வாகிகள் என்.பாலமூர்த்தி, தேவராஜ் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று, இருகூர் பேரூ ராட்சி செயல் அலுவலரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தாலுகா செயலாளர் சந்திரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஸ்டா லின் குமார், ராஜேஸ்வரி ஆகி யோர் தலைமையில் மனு அளிக் கப்பட்டது. சூலூர் பேரூராட்சி யில் நகர செயலாளர் இப்ராகிம், பேரூராட்சி கவுன்சிலர் வேலுச் சாமி ஆகியோர் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், ஊழியர்கள் உட்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரி
பாலக்கோடு பேரூராட்சியில் கட்சியின் வட்ட செயலாளர் கோவிந் தசாமி, பாலக்கோடு வட்டக் குழு உறுப்பினர்கள் தோழர் மீன் முருகன், காரல் மார்க்ஸ் ஆகி யோர் தலைமையில் மனு அளிக் கப்பட்டது. இதேபோல், மாரண்ட அள்ளி பேரூராட்சியில் மாவட்ட குழு உறுப்பினர் டி.எஸ்.ராமச் சந்திரன், வட்டகுழு உறுப்பினர் கள் ராஜா,சந்திரசேகரன் ஆகி யோர் தலைமையில் மனு அளிக் கப்பட்டது. காரிமங்கலம் பேரூ ராட்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர் வழக்க றிஞர். டிமாதையன், ஒன்றிய செய லாளர் பி.ஜெயராமன் மற்றும் கே.வி.முருகேசன் ஆகியோர் தலைமையில் மனு அளிக்கப்பட் டது. கம்பைநல்லூர் பேரூராட்சி யில் ஒன்றியக்குழு உறுப்பி னர் மாதேஷ் மற்றும் ஆணஸ்ட் ராஜ் ஆகியோர் தலைமையில் மனு அளிக்கப்பட்டது பொ.மல்லா புரம் பேரூராட்சியில் பாப்பி ரெட்டிப்பட்டி வட்டசெயலாளர் தனுசன் மற்றும் தீர்த்தகிரி கணே சன் ஆகியோர் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. பாப்பி ரெட்டிப்பட்டி ,கடத்தூர் பேரூ ராட்சியில் மாவட்டக்குழு உறுப்பி னர் டி.வஞ்சி மற்றும் சொக்க லிங்கம், மேகநாதன், பழனிச்சாமி, செல்வம், கண்ணன், நாகராஜ் ஆகியோர் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.