districts

img

அரசு வழங்கிய வீட்டு மனைகளை மீட்டுத்தர வலியுறுத்தி மனு

தருமபுரி, ஜன.18-  பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த 96 பேர் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது இலவச வீட்டு மனைகளை மீட்டு தர கோரி  தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு அளித்துள்ளனர். அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது, கடந்த 1992 ஆம் ஆண்டு,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் வீடு கட்ட இலவச வீட்டுமனை பட்டாவை  பாப்பிரெட்டிப்பட்டி யில் வசிக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சார்ந்த 96 பேருக்கு அரசு வழங்கியது.  ஆனால், இதுநாள் வரை தங்க ளுக்கு வழங்கப்பட்ட இடம் அளந்து காட்டப்படவில்லை. அதனால் அந்த இடத்தில் எங்களால் வீடு கட்டி வசிக்க முடி யாமல் கடந்த 30 ஆண்டுகளாக சிரமப்பட்டு வருகிறோம். இந்நிலையில், தற்போது பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த சிலர்  அரசு அதிகாரிகள் துணையுடன் எங்களது வீட்டுமனை களை வேறு நபர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு  முறைகேடாக பட்டா வழங்க  தற்போது ஏற்பாடு செய்து வருகி றார்கள். எனவே, அரசு வழங்கிய இலவச வீட்டுமனையை முறைகேடாக விற்பனை செய்ய முயலும் அவர்கள் மீது  தகுந்த நடவடிக்கை எடுத்து, எங்கள் பெயரில் வீட்டுமனை பட்டா கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.