கோவை, டிச.27- உடையாம்பாளையம் சுற்றுவட் டாரப்பகுதியில் போதிய பேருந்து வசதி இல்லாததால், கல்விச்சாலை செல்லும் மாணவர்கள் அவதிப்படுவ தாகவும், ஏற்கனவே இயங்கி வந்த பேருந்துகளை மீண்டும் இயக்கக் கோரி ஊர் பொதுமக்கள், மாணவர்கள் ஆட்சி யர் மற்றும் போக்குவரத்து அதிகாரி களிடம் மனு அளித்தனர். கோவை மாவட்டம், உடையாம்பா ளையம், நஞ்சேகவுண்டன்புதூர், உரு மாண்டம்பாளையம், வெள்ளக்கிணறு உட்பட்ட பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பள்ளி, கல் லூரி மாணவர்கள் அதிகம் படித்து வரு கின்றனர். இந்நிலையில், கொரோனா காலத்திற்கு பிறகு இப்பகுதியில் பேருந்து வசதி சரிவர இயங்குவ தில்லை என கூறப்படுகிறது. பேருந்து வசதி வேண்டு நீண்ட நாள் கோரிக்கை வைத்த பிறகு ஒரே ஒரு சொகுசு பேருந்து இயக்கப்பட்டது. இதுவும், முறையான நேரத்திற்கு வராததால், கூலி வேலைக்கு செல்லும் மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலதரப்பட்ட மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, அவ்வ ழியில் சாதாரண கட்டணத்துடன் ஏற்க னவே இயங்கி வந்த 97 மற்றும் S9D என்ற எண் கொண்ட பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி ஊர்மக்களிடம் கையெழுத்து பெற்று, ஆட்சியர் அலுவலகம் மற்றும் போக்கு வரத்து கழக வணிகப்பிரிவு அதிகாரி ஜெகதீஷிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பொரு ளாளர் தினேஷ் ராஜா, மாவட்டச் செயற் குழு உறுப்பினர் முத்துமுருகன் மற்றும் ஊர்பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.