ஈரோடு, நவ. 9- மாநகராட்சிகளில் நிரந்தர பணியிடங் களை ஒழித்து தனியார்மயத்திற்கு வழிவகுக் கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண் டும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரி டம் ஈரோடு மாநகராட்சி அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பினர் வியாழனன்று மனு அளித்தனர். தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணைகள் படி, சென்னை நீங்கலாக 20 மாநகராட்சி களில் நிரந்தர பணியிடங்களை குறைத்து தனியார்மயப்படுத்த முயற்சி நடைபெறு கிறது. இதனை எதிர்த்து ஈரோடு மாநகராட்சி தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாமன்றமும் இத்தொழிலாளர்களின் போராட் டத்திற்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் கவ னத்திற்கு கொண்டு செல்வது என தீர்மானம் இயற்றியது.
மேலும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி, போராட்டத்தில் ஈடுபட்ட தொழி லாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை யடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப் பட்டது. இந்நிலையில், மாநகராட்சி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் நக ராட்சி நிர்வாகத்துறை அமைச்சரிடம் மனு அளித்தனர். இதில், மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வை யாளர்கள், ஓட்டுநர்கள், டிபிசி பணியாளர் கள், தரவு உள்ளீட்டாளர்கள் உள்ளிட்ட பணி களில் நிரந்தரம் மற்றும் பணி நிரந்தரமில்லா மல் சுமார் 1500 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் நிரந்தரப்படுத்தப் படாத தொழிலாளர்களை நிரந்தரமாக்க கோரி வருகின்றனர். இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணைகள் தொழிலாளர் நலனுக்கும், மக் கள் நலனுக்கும் எதிராக உள்ளது. குறைந்த பட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா கால சிறப்பு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். தனியார் மயத் திற்கு வழிவகுக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் சிஐ டியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன், எல்பிஎப் கோபால், ஏஐடியுசி சின்னசாமி, சுய உதவிக்குழு பணியாளர் நலச்சங்க குண சேகரன் மற்றும் ஆதித்தமிழர் தூய்மை தொழி லாளர் பேரவை மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.