districts

img

முட்டை கொள்முதல் விலை: ஆட்சியரிடம் மனு

நாமக்கல் அக்.3- முட்டை கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி கோழிப் பண்ணை உரிமையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர்.  நாமக்கல் மாவட்டம் முட்டை உற்பத்திக்கு பெயர் பெற்ற தாகும். தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு வெளி மாநிலங் களுக்கும், வெளிநாட்டிற்கும் அதிகளவு முட்டைகள் ஏற்றுமதி  செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்ட கோழி பண்ணை யாளர்கள் சங்கத்தின் சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சிய ருக்கு கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது, நாமக்கல் மாவட்டத் தில் ஏராளமான கோழி பண்ணைகள் செயல்பட்டு வரும் நிலை யில், தமிழ்நாடு அரசு சத்துணவு திட்டத்திற்கு ஒரு கோழி  முட்டையின் கொள்முதல் ஒப்பந்த விலையை ரூ.5.80  காசு களாக அறிவிக்க வேண்டும். இல்லையேல்  நாமக்கல் மண்ட லத்தில் கோழிப்பண்ணை தொழில் அழியும் நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறை முகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கு ஐந்து ரூபாய்க்கு  மேல் செலவாகிறது. இந்நிலையில், தற்போது வழங்கப் படும் கொள்முதல் விலை போதுமானதாக இல்லை. எனவே , சத்துணவு முட்டைக்கு உரிய விலை கிடைக்க வேண்டும்.எனவே, அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.