கோவை, நவ.27- அருந்ததியர் மக்களுக்கு கட்டிக் கொடுத்த குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், உடன டியாக சீரமைத்து தரக்கோரி பாதிக் கப்பட்ட மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கோவை மாவட்டம், பேரூர் செட் டிபாளையத்தில் இந்திரா நகர் என்கிற பகுதி உள்ளது. இங்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அருந்ததி யர் மக்களுக்கு அரசு சார்பில் குடியி ருப்புகள் கட்டித் தரப்பட்டது. அந்த குடியிருப்புகள் மிகவும் பழுத டைந்து உள்ளது. இது குறித்து அப்ப குதி மக்கள் சுமார் ஐந்து ஆண்டுக ளுக்கும் மேலாக, குடியிருப்புகளை சீரமைத்து தர வேண்டும் என ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்து வருகின் றனர். ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்நிலையில், கோவையில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், வீட்டி னுள் வசிப்பதற்கே அச்சமான நிலை யில் திங்களன்று ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ஒரு பலத்த மழை பெய்தால் வீடுகள் இடிந்து விழும் என்பதால், இம்முறையாவது மாவட்ட நிர்வாகம் ஏதேனும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். அப்பகு தியில் கழிவறை வசதி இல்லாத தால் பெண்கள், கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.