கழிவுகளை வெளியேற்றும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு
ஈரோடு, டிச.20- பெருந்துறை சிப்காட்டிலிருந்து கழிவுகளை வெளி யேற்றும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.சின்னசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக் கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, பெருந்துறை சிப் காட்டில் 20க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த ஆலைகள் இணைந்து, பெருந்துறை தோல் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் என்ற பெயரில் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைத்துள்ளன. ஆனால், சில ஆலைகள் கழிவுநீரை சுத்திகரிக்காமல் நச் சுக்கழிவாக குழாய் மூலம் காலி நிலங்களில் வெளியேற் றுகின்றனர். இதனைக் கண்டறிந்த அதிகாரிகள் சில ஆலை களையும், பொதுசுத்திகரிப்பு நிலையத்தையும் சில மாதங் களுக்கு முன்னர் மூடி விட்டனர். ஆனால், சுத்திகரிப்பு நிலை யம் இன்றி சில தோல் தொழிற்சாலைகள் இப்போது செயல் படுகின்றன. அந்த ஆலைகள் கழிவுகளை முறைகேடாக வெளியேற்றுவதோடு, பழைய தோலை எரிப்பது, நெகிழி பைகளை அரைத்துப் பொடியாக்கி கயிறு செய்வது, தேங் காய் தொட்டிகளை எரித்துக் கரி எடுப்பது, தொழிலா ளர்களை கேம்ப் கூலியாக ஆலைக்குள் தங்க வைப்பது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றன. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகாரளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சிப்காட் நிர்வாகம் மூடப்பட்ட, செயல்படாத தொழிற்சாலைகளுக்கும் தொடர்ந்து காவிரி தண்ணீர் வழங்கி வருகிறது. அந்த ஆலை களில் உள்ள திட, திரவ நச்சுக்கழிவுகளை அகற்றவும், சட்ட விரோத செயல்பாடுகளை தடுக்கவும் நடவ டிக்கை வேண்டும். சிப்காட்டில் உள்ள ஒரு ஜவுளி நிறுவ னம் சுற்றுச்சுவரில் துளையிட்டு, கழிவுநீரை வெளியேற் றுவதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தும் நடவடிக்கை இல்லை. அந்த இடத்தில் உள்ள தண்ணீா் 3,000 டிடிஎஸ்க்கு மேல் உப்புத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அந்த ஆலையை மூடி, இதுபோன்ற சட்ட விரோத ஆலைகளுக்கு வழங்கிய நிலத்தை சிப்காட் நிா்வாகம் திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் 4 பேர் கைது
கோபி,டிச.20- கோபிசெட்டிபாளையம் அருகே கடந்த 2019ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில், நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ22ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்த ரவிட்டுள்ளது. 2019ம் ஆண்டு அவ்வையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணி மோகன். இவரது மனைவியிடம் விஜயகுமார் என்பவர் தவறாக நடந்து கொண்டதாக, மணி மோகன் மற்றும் அவரது உறவினர்களான பூபதிராஜன், நாகராஜ், சதீஷ்குமார் ஆகியோர் விஜயகுமாரை அடித்து கொலை செய்தனர். இந்த வழக்கு கடந்த மூன்று ஆண்டு களாக ஈரோடு மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வில் நடை பெற்று வந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு புதனன்று வழங்கப் பட்டது. இதில், குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 22ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
கத்தோலிக் சிரியன் வங்கியில் கொள்ளை முயற்சி
கோவை, டிச.20- கோவை கணபதி அருகே கத்தோலிக் சிரியன் வங்கி யில் கொள்ளையடிக்க முயன்றவரை ரத்தினபுரி போலீ ஸார் கைது செய்தனர். கோவை மாவட்டம், கணபதி அருகே 40 வருடங்க ளுக்கு மேலாக கத்தோலிக் சிரியன் வங்கி செயல்பட்டு வரு கிறது. இந்த வங்கியில் கடந்த சனியன்று இரவு மர்ம நபர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். வங்கி யின் கண்காணிப்பு கேமாரா, பாதுகாப்பு காவலர் மற்றும் எச்சரிக்கை ஒளிப்பான் எதுவும் இல்லாததால் திருட்டு முயற்சி வெளியே தெரியவில்லை. திங்களன்று வழக்கம்போல் அதி காரிகள் பணிக்கு வந்த பிறகு தான் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து ரத்தி னபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்பு காரின் பேரில், வங்கியின் அருகில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து விசா ரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிவகங்கை மாவட் டத்தை சேர்ந்த மரியஅமிர்தம் என்ற நபர் திருட்டு முயற்சி யில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், கொள்ளை முயற்சி நடந்த சமயம் வங்கியில் ரூ.30 லட்சம் பணம், மற்றும் பல கோடி மதிப்பிலான நகைகள் இருந்துள்ளதும், வங்கி லாக்கர் அறைக்குள் அந்த நப ரால் நுழைய முடியவில்லை என்பதால், வங்கியில் இருந்த பணம் மற்றும் பலகோடி மதிப்பிலான நகையும் தப்பி யது.
வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
கோவை, டிச.20- தென் மாவட்டங்களில் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக, கோவை மாநகராட்சி சார்பில் லாரிகள் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப் பட்டன. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள் ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக அதிக கனமழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. பல்வேறு பகுதி களை வெள்ள சூழ்ந்ததால், பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மாநிலம் முழுவதிலும் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப் பிவைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவை மாநகராட்சி சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் லாரி கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. மாந கராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஏற்பாட்டின் பேரில் 30 மூட்டை அரிசி, பிஸ்கட், தண்ணீர் பாட்டில்கள், ஆயிரம் கிலோ கார வகைகள், 500 கிலோ இனிப்பு வகைகள், தலையணைகள் ஆகியவை உள்ளடக்கிய 15 ஆயிரம் பேருக்கான நிவாரணப் பொருட் கள் அனுப்பி வைக்கப்பட்டன.
காந்தி ஆசிரம ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
நாமக்கல், டிச.20- ஊழியர்களை பழிவாங்கும் நோக் கோடு செயல்படும் காந்தி ஆசிரம நிர்வா கத்தை கண்டித்து, ஆசிரம ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த காந்தி ஆசி ரமம் இயங்கி வருகிறது. இங்கு பணியில் உள்ள காந்தி ஆசிரம ஊழியர்கள் புதிய தாக ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தை ஆரம்பித் துள்ளனர். இந்நிலையில், சங்கத்தில் சேர்ந்தவர் களை பழி வாங்கும் நோக்கில் கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு கிளைகளுக்கு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்துள் ளதை கண்டித்தும், பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், தங்கள் சொந்த வேலைகளுக்கு ஆசிரம பணியாளர்களை பயன்படுத்திக் கொள்ளும் ஆசிரம நிர்வா கிகளை கண்டித்தும், காந்தி ஆசிரமம் முன்பு ஆசிரம ஊழியர்கள் உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டனர். ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், தொழிற்சங் கத்தை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.
நிலத் தரகர்களுக்கு தனி நல வாரியம்
சேலம், டிச 20 - நிலத்தரகர் தொழிலா ளர்களுக்கு தனி நல வாரியம் வழங்க கோரிக்கை எழுந் துள்ளது. தமிழக நிலத் தரகர்கள் நலச்சங்கத்தின் மகாசபை கூட்டம் சேலத்தில் நடை பெற்றது. இச்சங்கத்தின் மாநிலத்தலைவர் அண்ணா துரை தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் நிலத்தரகு தொழில் செய்து வரும் தொழிலாளர்களுக்கு பத்தி ரப்பதிவு துறை மூலமாக அரசு உரிமம் எண் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் மனு
நாமக்கல், டிச.20- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம் ஆலாம் பாளையம் பேரூராட்சி சார்பில், தனியார் மண்டபத்தில் புத னன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. அந்த முகாமில், காவேரி ஆர்.எஸ் கரட்டாங்காடு பகுதியில் இடிந்துவிழும் நிலையில் உள்ள மேல்நிலைத் தொட்டியை சீரமைத்து தர வேண்டும். முறையாக எரியாத தெருவிளக்கு களை சரி செய்ய வேண்டும். வஉசி நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும், காவேரி ஆர்.எஸ் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் முறையாக நின்று செல்வதற்கு நட வடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் அடங்கிய மனுக்களை, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் உரிய அலுவலரிடம் தனித் தனியே வழங்கப்பட்டது . இந்த நிகழ்வின் பொழுது ஆலாம்பாளையம் பேரூராட்சி தலைவர் சகுந்தலா, ஆலாம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலா ளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.அசோகன் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
மானை வேட்டையாடிய 4 பேர் கைது
ஈரோடு, டிச.20- சத்தியமங்கலம் வனப்பகுதியில் மானை வேட்டையாடிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலி கள் காப்பகத்தில் தாளவாடி, பவானிசாகர் உட்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் ஒரு சிலர் அனுமதியின்றி நுழைந்து மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி வருகிறார் கள். வனத்துறை அதிகாரிகளும் அடிக்கடி ரோந்து சென்று வனவிலங்குகளை வேட்டை யாடும் கும்பலை பிடித்து, அபராதம் விதிப் பது மற்றும் கைது உள்ளிட்ட நடவடிக்கை கள் எடுத்து வருகின்றனர். ஆனாலும், சிலர் வனப்பகுதியில் புகுந்து மான் உள்ளிட்டவை களை வேட்டையாடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும், கொத்தமங்கலம் வனப் பகுதி, போலிபள்ளம் பகுதியில் வனத் துறை சார்பில் குட்டை அமைத்து தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது. அந்த குட்டை யில் மான்கள் தண்ணீர் குடித்து செல்வது வழக்கம். இந்நிலையில், பவானிசாகர் வனச் சரகத்துக்குட்பட்ட கொத்தமங்கலம் காப்பு காடு வனப்பகுதியில் வனச்சரகர் சிவகுமார், வனக்காப்பாளர் மற்றும் வனப்பகுதி பணியா ளர்கள் ரோந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது, போலிபள்ளம் பகுதியில் 4 பேர் நைலான் வலைகளுடன் சுற்றி கொண்டிருந்த னர். இதையடுத்து வனத்துறையினர் அவர் களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் சத்தியமங்கலம் அடுத்த புதுப்பீர் கடவு பகுதியைச் சேர்ந்த சின்னசாமி (44), கார்த்திகேயன் (21), திருப்பூரைச் சேர்ந்த சதீஸ்குமார் (23), வெங்கடேஷ் (28) என்பது தெரியவந்தது. மேலும், நைலான் வலைகள் மூலம் மான்களை வேட்டையாடி யதும் தெரிய வந்தது. இதையடுத்து வனத் துறையினர் அவர்களிடமிருந்த வலைகள் மற்றும் மான் கறி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து 4 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி கோபிசெட்டிபாளையம் சிறையில் அடைத்த னர்.
உதகை மலை ரயில் சேவை மீண்டும் ரத்து
உதகை, டிச.20- மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான மலைரயில் சேவை, மண் சரிவு காரணமாக மீண்டும் ரத்து செய்யப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் மலை சார்ந்த பகுதிகளில் செவ்வாய்கிழமை இரவு கன மழை பெய்தது. இதனால், அடர்லி - ஹில்குரோவ் ரயில் நிலையங்களிடையே தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு சென்றுகொண்டிருந்த, மலைரயில் கல்லார் ரயில் நிலையத்தில், சுற்றுலா பயணிகளுடன் நிறுத்தப்பட்டது. மேற்கொண்டு பயணிக்க வழியின்றி நின்றிருந்த மலைரயில், மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கே இயக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். ஆன்லைனில் புக்கிங் செய்த சுற்றுலா பயணிகள் தங்களது பயண கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொண்டனர். ரயில்வே உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இளம் வடிவமைப்பாளர் விருது
நாமக்கல், டிச.20- நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசு இளம் கைத்தறி வடிவமைப்பாளர்களிடமிருந்து சிறந்த வடிவமைப்புகளை போட்டித்தேர்வின் மூலம் தேர்வு செய்ய ஏதுவாக, மாநில அளவிலான சிறந்த “இளம் வடிவமைப்பாளர் விருது” வழங் கும் பொருட்டு சிறந்த வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுப்ப தற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந் தெடுக்கப்பட்ட இளம் வடிவமைப்பாளர்களில் முதல், இரண் டாம் மற்றும் மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு முறையே ரூ.ஒரு லட்சம், ரூ.75 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். மேற்படி விருதுக்கான வழிகாட்டுதல் கள், வடிவமைப்பு நுழைவுப் படிவம், தகுதிகள், தேர்ந்தெ டுக்கும் முறை மற்றும் வடிவமைப்பை அனுப்ப வேண்டிய முகவரியின் விபரங்கள் www.loomworld.in என்ற இணைய தளத்தில் காணலாம். வடிவமைப்புகளை சமர்ப்பிக்க கடைசி தேதியாக அறிவிக்கப்பட்ட டிச.10 ஆம் தேதி, தற்போது டிச.31 ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில அளவிலான சிறந்த வடிவமைப்புகளைத் தேர்ந்தெ டுப்பதில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் வடிவமைப்புகளை உதவி இயக்குநர், உதவி இயக்குநர் அலுவலகம், கைத்தறி துறை, (திருச்செங்கோடு சரகம்), ஈ.காட்டூர், எலந்தகுட்டை அஞ்சல்-638 008 என்ற முகவரியில் சமர்ப்பிக்கலாம். மேலும், தகவலுக்கு 97500 44550 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தி ஏலம்
அவிநாசி, டிச.20- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டு றவு விற்பனை சங்கத்தில் புத னன்று பருத்தி ஏலம் நடை பெற்றது. 18,166 கிலோ பருத்தி கொண்டு வரப்பட் டது. இதில், ஆர்.சி.எச். பி.டி. ரகம் கிலோ ரூ.60 முதல் ரூ.73 வரையிலும், கொட்டுரக (மட் டரக) பருத்தி குவிண்டால் கிலோ ரூ.20 முதல் ரூ.35 வரை யிலும் ஏலம் போனது. மொத் தம் ரூ.11.94 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.