ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
இதுதொடர்பாக சாலை போக்குவரத்து சம்மேளன பொதுச்செயலாளர் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது, சங்கரின் மரணம் தொடர்பாக போர்வெல் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கான உரிய பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும். மேலும், வெளிநாடுகளில் பணிபுரியும் போது உயிரிழப்புகள் ஏற்படும் போது, இந்திய அரசு உடனடியாக தீர்வு காண புதிய கமிட்டி ஒன்றை அமைத்து தொழிலாளர் உடலை பாதுகாப்பாக சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கர் மரணம் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள் ளது. இதுகுறித்து ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் தலையிட்டு உரிய தலையீடு செய்ய வேண்டும். மேலும், சங்கரின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட் டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நாமக்கல், மே 9- தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிந்த நாமக்கல்லைச் சேர்ந்த போர்வெல் வண்டி ஓட்டுநர் மர்மான முறையில் உயிரிழந் தார். எனவே, அவரது உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள பட்டதைன்குட்டை அருந்த தியர் தெருவைச் சேர்ந்த சங்கர் (40). இவ ருக்கு மனைவி மீரா (34), மகன்கள் கிரிஸ் (10), ரியாஸ் (8) ஆகியோர் உள்ளனர். திருச் செங்கோடு சினேகா போர்வெல்ஸ் வண்டி டில்லர் மற்றும் ஓட்டுநராக பணியாற்றி வந்த சங்கர், கடந்த 2021 ஆண்டு ஏப்ரல் மாதத் திற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவிற்கு போர் வெல் பணிக்காக மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம், மூன்று வருடம் பணிபுரிவதற்கான வாய்மொழி ஒப்பந்தம் என்ற அடிப்படை யில், சென்றார். பின்னர் தென் ஆப்பிரிக்கா விற்கு சென்ற சங்கருக்கு கடந்த மூன்று மாத காலமாக சம்பளம் மற்றும் உணவு முறையாக உரிமையாளர் வழங்கா மல் வந்துள்ளார். மேலும், சில தினங்க ளுக்கு முன்பு சங்கர் அவரது மனைவி மீரா விடம் வண்டியில் ஆயில் மாற்றி ஊற்றி விட் டதாகவும், இதனால் என்னை உரிமை யாளர் அடித்து விட்டதாகவும் கைப்பேசி மூலம் அழுது புலம்பியுள்ளார்.
பணம் கேட்டு மிரட்டல்
இச்சூழ்நிலையில் சங்கர் கடுமையான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, உரிமையாளர் தரப்பில் மீராவிடம் கூறப்பட்டுள்ளது. இத னால் சந்தேசமடைந்த மீரா, மே 2 ஆம் தேதி யன்று எனது கணவரை சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு உரிமையாளர் 50 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பினால், கணவரை அனுப்பி வைக்கிறேன் என்று உரிமையாளர் கூறி யுள்ளார். இதையடுத்து மீரா கந்து வட்டிக்கு கடன் வாங்கி பணத்தை அனுப்பி வைத்துள்ளார். இருப்பினும் சங்கரை அனுப்பி வைக்காமல் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மே 6 ஆம் தேதியன்று சங்கர் இறந்து விட்டதாக உரிமையாளர் தகவல் தெரி வித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மீரா மற்றும் அவரது உறவினர்கள் சங்கரின் உடலை வீட்டிற்கு அனுப்பி வையுங்கள் என்று கூறியதற்கு ரூ.2 லட்சம் தந்தால் உடல் அனுப்பி வைக்கப்படும் எனவும், தராத பட்சத்தில் தென் ஆப்பி ரிக்காவிலேயே உடலை அடக்கம் செய்து விடுவதாக உரிமையாளர் மிரட்டியுள்ளார்.
சிஐடியு தலைவர்கள் ஆறுதல்
இந்நிலையில், சங்கரின் பிரேத உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர வேண் டும். கணவரின் இழப்பிற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவ ரின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர். இதற்கிடையே இச்சம்பவம் குறித்து தகவலறிந்த நாமக்கல் மாவட்ட மோட்டார் இன்ஜினியரிங் தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் சு.சுரேஷ் தலைமையில், தமிழ்நாடு சாலை போக்கு வரத்து சம்மேளன மாநில பொதுச்செயலா ளர் மூர்த்தி, சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, மாவட்ட துணைச்செயலாளர் கு.சிவராஜ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் கே.தங்க மணி ஆகியோர் சங்கரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.