districts

img

கோவையில் அம்பேத்கருக்கு சிலை அமைத்திடுக

தருமபுரி, செப்.25- இலவச வீட்டுமனை பட்டா கேட்டு வெங்கட்டராமபுரம் போயர் இன மக்கள் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், பையர்நாயக்கன்பட்டி ஊராட்சிக்குபட்டது வெங்கட்டராமபுரம். இங்கு போயர் சமூக  மக்கள் வசித்து வருகின்றனர். சொந்த நிலம் இல்லாததால், குவாரிகளில் கூலிக்கு கல் உடைப்பது மற்றும் விவசாய வேலைக்கு செல்கின்றனர். தினக்கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வரும், இவர்கள் வீடு இல்லாமல் இரண்டு, மூன்று குடும்பங்களாக ஒரே வீட்டில் வசிக்கின்றனர். இதனி டையே இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 2009 ஆம் ஆண்டு அதிகாரிகளுக்கு மனு அளித்தனர். ஆனால், எந்த  நடவடிக்கையும் இல்லை. அதேசமயம் அதே ஊராட்சியில் வசதி படைத்த தகுதியில்லாத நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. எனவே, இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு அளித்தனர். அருந்ததிய மக்கள் புகார் இதேபோல் நல்லம்பள்ளி ஒன்றியம், தின்னஅள்ளி பகுதி யில் சர்வே எண்: 125ல் உள்ள நிலம் அருந்ததியர் மக்களுக்கு  கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இத னால் அருந்ததியர் மக்கள் சொந்த வீடு இல்லாமல் அவதிக் குள்ளாகி வருகின்றனர். எனவே, அருந்ததியர் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி, அந்த இடத் தில் வீடு இல்லாத அருந்ததியர் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.