districts

img

கந்துவட்டி கொடுமை - சுவரொட்டிகளை ஏந்தி ஆட்சியரிடம் மனு

கோவை, மே 30-  கோவையில் கந்துவட்டி கும்பல் மிரட்டு வருவதாக கூறி பாதிக்கப் பட்ட நபர் கந்துவட்டிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிக ளோடு ஆட்சியர் அலுவலத்திற்கு வந்து மனு அளித்ததால் பெரும் பர பரப்பு ஏற்பட்டது. கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரை கந்துவட்டி கும்பலைச் சேர்ந்தவர் அராஜக வட்டி கேட்டு மிரட்டுவதாக கூறி திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் கோரிக்கை சுவரொட்டியை ஏந்திவாறு வந்து மனு அளித்தார். இது  குறித்து பாதிக்கப்பட்ட குமார்  கூறுகை யில், தனது தந்தை வெள்ளியங்கிரி சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரிடமிருந்து கட னாக 50 ஆயிரம் வாங்கியுள்ளார். தற் போது எனது தந்தை கால் அறுவை சிகிச்சை செய்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், எனது  தந்தை வாங்கிய தொகைக்கு  மீட்டர்  வட்டி என்கிற அடிப்படையில் பல  லட்சம் ரூபாயை திருப்பி தர வேண்டும் எனக்கோரி நிர்பந்தித்து வருகிறார். இதுதொடர்பாக  சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலை யில், தற்போது புகாரை வாபஸ் பெறச் சொல்லி சில ஆட்களை கொண்டு மிரட்டுகின்றார். இவ்வாறு அவர் தெரி வித்தார். முன்னதாக, மனு அளிக்க வந்த  குமார் மற்றும்  அவரது உறவினர்கள் “கந்துவட்டிக்கொடுமை..அராஜகம்.. மீட்டர் வட்டி..., துப்புரவு தொழிலா ளர்களின் ஏடிஎம் கார்டுகளை சிங்கா நல்லூர் கந்துவட்டி மனோகரனிட மிருந்து பறிமுதல் செய்க, வெள்ளி யங்கிரி கொடுத்த கந்துவட்டி புகார்  மீது நடவடிக்கை எடுத்து மனோக ரனை கைது செய்ய வேண்டும்” என வாசகங்கள் அடங்கிய சுவரொட்டி களை ஏந்தி மனு அளிக்க வந்ததால் பர பரப்பு ஏற்பட்டது.