தருமபுரி, மார்ச் 21- ஆலமரத்தூர் கிராமத்திற்கு மயானப்பாதை ஏற்ப டுத்தி தரக்கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி யிடம் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பட்டு கோணம்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட ஆலமரத்தூர் கிராமத் தில் சர்வே எண் 125/2 என்கிற இடத்தில், கிழக்குப் பகுதியில் கடந்த 30 வருடங்களாக முறையாக வட்டாட்சியர் மூலம் அளந்து சுமார் 70 குடும்பங்களுக்கான மயானம் ஒதுக்கப் பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், அதன் அருகாமையில் நிலம் வைத்திருக்கும் சின்னசாமி மகன் சந்திரன் என்பவர் சடலங்களை புதைப்பதனால் நீர் மாசுபடுகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது என்கிற அடிப்படையில் நீதிமன்றத்தின் மூலம் தடை யாணை வாங்கி உள்ளார். இதனால் பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் மயானம் பகுதி அரசு நிலம் யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது, மயானமாக பயன்படுத்தக்கூடாது என விளம்பரப் பலகை அமைத்துள்ளார். எங்களுக்கு மயா னமாக பயன்படுத்த வேறு எதுவும் இல்லை. இதனால் நாங் கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகிறோம். இது தொடர் பாக ஊர் பொது மக்களாகிய நாங்கள் பலமுறை விண் ணப்பங்கள் அளித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கை யும் இல்லை. எனவே, இப்பகுதியை ஆய்வு செய்து அதே இடத்தையோ அல்லது மாற்று இடம் ஏற்பாடு செய்தோ எங்க ளுக்கு வழிவகுத்து தரவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.