districts

img

பள்ளி முன்பு வேகத்தடை அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

நாமக்கல், ஜன.8-  எலச்சிபாளையம் அரசு பள்ளி முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும் என ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே  எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாண விகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி யின் முன்பு ஏற்கனவே இருந்த  வேகத்த டையை சாலை பராமரிப்பு பணியின் போது  அகற்றப்பட்டது. இதனையடுத்து, மீண்டும்  வேகத்தடை அமைக்காமல் விட்டுவிட்ட தால், அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுத்துகிறது. மேலும், இது ராசிபுரம் திருச்செங்கோடு பிரதான சாலை  என்பதால், வாகனங்கள் அதிகமாக செல்வதால் தொடர்ந்து சாலை விபத்துக்கள் ஏற்ப்படுகிறது. இதனால் மாணவர்கள்  மற்றும் பொதுமக்களுக்கு கை, கால் முறிவு, உயிரிழப்பு  ஏற்படுகின்றன. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்க கூட்டத் தில் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் தலை மையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறைக்கு  அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதிய ளித்தார்.