தருமபுரி, பிப்.5- இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சி யர் கி.சாந்தியிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், சாமண்டஅள்ளி ஊராட்சிக்குபட்டது ஆர்.எஸ்.தொட்டம்பட்டி. இப்பகுதியில் பல்வேறு சமூக மக்கள் வாழ்ந்து வரு கின்றனர். இவர்களின் பெரும்பாலா னோர் ஏழை கூலி தொழிலாளர்கள். சொந்த நிலம் இல்லாதவர்கள். பல ருக்கு வீடு இல்லை. மேலும், சிலர் புறம் போக்கு இடத்தில் வீடு கட்டி வசித்து வரு கின்றனர். இதுவரை அந்த இடத்திற் கான பட்டா வழங்கவில்லை. வீடு இல் லாத மக்கள் பலர் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று தடுப்புகளாக பிரித்து அதில் குடியிருந்து வருகின்றனர். இலவச வீட்டுமனை பட்டா கேட்டு அப்பகுதி மக்கள் பலமுறை வட்டாட்சியர் உள் ளிட்ட அலுவலரிடம் மனு அளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. மேலும், புறம்போக்கு இடத் தில் 50க்கும் மேற்பட்டவர்கள் நீண்ட ஆண்டுகாலமாக குடியிருந்து வருகின் றனர். இவர்களுக்கும் பட்டா வழங்க வில்லை. தினக்கூலி வேலை செய்து, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத் தில் பிழைப்பு நடத்த வேண்டியுள்ளது. இதனால் சொந்தமாக பணம் கொடுத்து வீட்டுமனை வாங்க முடியாத நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இலவச வீட்டுமனை பட்டாவும், நீண்ட ஆண்டுகளாக குடியிருந்து வருபவர்க ளுக்கு மனைப்பட்டாவும் வழங்க வேண் டும் என வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் பலர் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி யிடம் மனு அளித்தனர்.