தருமபுரி, நவ. 27- இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கரகூர் இருளர் இன மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந் ்தியிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம் பாலக் கோடு வட்டம் பஞ்சப்பள்ளி ஊராட் சிக்குபட்டது கரகூர் கிராமம். இங்கு நூற்றுக்கும்மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர் களில் ஒரு பகுதியினர் புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். மற்றொரு பகுதியி னர் அறநிலை துறைக்கு சொந்த மான இடத்தில் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இவர்க ளுக்கு சொந்தமாக விவசாய நிலம் இல்லை. இவர்கள், வனத்தில் தேன் எடுப்பது, சுண்டக்காய் சேகரித்து, காய்ந்த பிறகு விற்பது, மேலும் விவசாயகூலி வேலைக்கு சென்று அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். இரண்டு தலைமுறையாக குடிசை வீட்டில் குடியிருந்து வரும் இம்மக்கள், மழை வந்தால் குடிசை வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விடு கிறது. அரசு வழங்கும் வீடு வழங் கும் திட்டத்தில் விண்ணப்பிக்க புறம்போக்கு இடத்தில் வசிப்ப தால் நாங்கள் தகுதியற்ற நபர்க ளாக மாறிவிடுகின்றனர். எனவே, புறம்போக்கு இடத் தில் வசிப்பவர்களுக்கு மனைப் பட்டா வழங்கவேண்டும். அறநிலை துறைக்கு சொந்தமான இடத்தில் வசிப்பவர்களுக்கு வேறு இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, அரசு தொகுப்பு வீடு வழங்கவேண் டும் என மனுவில் தெரிவித்துள்ள னர். இடத்தை அளந்து கொடுத்திடுக தருமபுரி வட்டம் சோகத்தூர் ஊராட்சி ஆண்டுகாரம்பட்டி கிரா மத்தில் உள்ள அருந்ததியர் இன மக்கள் 106 பேருக்கு 1998 ம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா தரும புரி மாவட்ட நிர்வாகம் வழங்கி யது. வழங்கப்பட்டு 25 ஆண்டு கள் ஆகியும் வழங்கிய மனைபட டாவுக்கான இடத்தை பயனாளிக ளுக்கு அளந்து கொடுக்கவில்லை மனைபட்டாவுக்கான இடத்தை அளந்து கொடுக்கவேண்டும் என அம்மக்கள் பல கட்ட போராட் டங்களை நடத்தினர். மேலும் மனைப்பட்டா வழங்கிய இடத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பில் ஈடுபட் டனர். இதனை எதிர்த்து பயணா ளிகள் 2022ம் ஆண்டு நிலம் ஆக்கிர மிப்பாளர்களை அகற்றி அந்த இடத்தில் மனைப்பட்டா வழங்கப் பட்டவர்களுக்கு அதற்கான இடத்தை அளந்து கொடுக்க வேண் டும் என, சென்னை உயர்நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி உரிய பயனாளிகளுக்கு நிலத்தை அளந்து கொடுக்கவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதி மன்ற தீர்ப்புகளை முன்வைத்து மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப் பாளர்களுக்கு இடத்தைவிட்டு காலிசெய்யுமாறு நோட்டீஸ் வழங்கியது. எனவே, அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி உடனடியாக இலவச வீட்டுமனை பட்டாவுக்கான இடத்தை மாவட்ட நிர்வாகம் வழங்கவேண்டும் என மனு அருந்ததிய மக்கள் மனு அளித்தனர்.