districts

img

ஊராட்சி நிர்வாகத்தில் பெண் பிரதிநிதியின் கணவரின் ஆதிக்கத்தை தடுத்திடுக

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு

அவிநாசி, செப்.21- அவிநாசி அருகே புதுப்பாளை யம் ஊராட்சியில் பெண் பிரதிநிதி களின் கணவர் ஆதிக்கத்தை தடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் புகார் மனு அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன் றியம் புதுப்பாளையம் ஊராட்சியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கஸ்தூரி பிரியா என்பவர் ஊராட்சி  மன்ற தலைவராக உள்ளார். மேலும்,  ஊராட்சி மன்ற பெண் பிரதிநிதிகளாக  ஆறு நபர்கள் உள்ளனர். இந்நிலை யில், சில பெண் பிரதிநிதிகளின்   கண வர்கள் மற்றும் உறவினர்கள் சட்ட விரோதமாக ஊராட்சி நிர்வாகத்தில் தலையிட்டு நிதி ஆதார பயன்பாடுகள் உட்பட அனைத்தையும் தீர்மானிக் கின்றனர். இதனால் பெண் பிரதிநிதி கள் சுயமாக செயல்படுவது தடை  செய்யப்பட்டு, உரிமைகள் பறிக் கின்ற சூழ்நிலை உருவாகிறது. ஆகவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுப் பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள் கே. பாலசுப்பிரமணி, கே. குமாரவேல், எம்.தேவிகா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.முரு கன் உள்ளிட்டோர் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்த னர். இம்மனுவை பெற்றுக்கொண்ட அவர், இப்பிரச்சனை தொடர்பாக விசாரித்து உயர்மட்ட அதிகாரிக ளுக்கு தகவல் தெரிவிப்பதாக உறுதி யளித்தார்.