கோவை, மே 24- கோவையில் தனி குறுந்தொழில் பேட்டை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டேக்ட் (தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள்) சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். டேக்ட் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் தலைமையிலான தொழில்துறையினர் செவ்வாய்க்கிழமை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த னர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டம் குறு சிறு தொழில்கள் நிறைந்த மாவட்டம். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு சிறு,குறு தொழில்கள் நடைபெற்று வந்த நிலையில், தொடர்ந்து பல்வேறு நெருக் கடிகளை நாங்கள் சந்தித்து வருகிறோம். இந்நிலையில், கடந்த 21ஆம் தேதியன்று கவுண்டம் பாளையம் பகுதி செளடாம்பிகா நகரில் நடைபெற்று வந்த கம்பெனியை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மாநகராட்சி அலுவலர்கள் மூடிவிட்டனர். இதுகுறித்து, மாநகராட்சி ஆணையரை சந்திக்க முயன்றபோது, அவர் இல்லாத தால் அவரது தொலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பி னோம். ஆனால், எவ்வித பதிலும் இல்லை. தற்போது தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர். எனவே, மூடப்பட்ட நிறுவனங்களை உடனடியாக திறக்க வேண்டும். மேலும், கோவையில் தனி குறுந்தொழில் பேட்டை அமைத்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.