நாமக்கல், ஆக.30- சூக்லாம்பட்டி முதல் பள்ளிக்காட்டுப்பட்டி வரை சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி கொல்லிமலை அருகே உள்ள குண்டூர் நாடு மலைவாழ் மக்கள் ஆட்சியரி டம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், குண்டூர் நாடு அருகே உள்ள பள்ளிக்காட்டுப்பட்டி பகுதியில் 100க்கும் மேற் பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். குண்டூர் நாடு பகுதி கொல்லிமலையின் எல்லைப்பகுதியில் அமைந்துள் ளது. இப்பகுதி மக்கள் கொல்லிமலை பகுதியில் உள்ள கூட்டு றவு சங்கம், வங்கி, ஊராட்சி மன்ற அலுவலகம், வருவாய்த் துறை போன்ற அரசு அலுவலகங்களுக்கு வர வேண்டியுள் ளது. பேருந்து மற்றும் இரு சக்கர வாகனத்தில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரம் சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது. பள்ளிகாட்டுப்பட்டி முதல் சுக்கலாம்பட்டி வரை பட்டா நிலத் தில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் மண் சாலை உள்ளது. இவ் வழியாக நாகநல்லூர், தம்மம்பட்டி, கொப்பம்பட்டி செல்லும் திண்டூர் பட்டி, நத்துக்குளிப்பட்டி, சுண்டக்காடு, ஊர்மலைப் பட்டி பொதுமக்கள், அப்பகுதியில் இங்கு விளையும் பொருட் களை தலையில் சுமந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், பள்ளிக்கு மாணவ, மாணவியர் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து இந்த மண்சாலையை தார்ச்சாலை அமைத்து, பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண் டும் என வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் குண்டூர் நாடு மலைவாழ் மக்கள் மனு அளித்த னர்.