ஈரோடு, நவ.14- தாளவாடி ஒன்றியத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியை தரம் உயர்த்தக்கோரி அப்பகுதி பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டத்திற்குட்பட்டது கோட் டாடை கிராமம். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டில் இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்ற னர். இதில் சுமார் 60 விழுக்காட்டினர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இப்பள்ளி சத்தியமங்கலம் புலிகள் காப்ப கத்தின் எல்லைக்குள் அமைந்துள்ளது. இங்கு 8 ஆம் வகுப்பை முடித்து, உயர்நிலைப்பள்ளிக்குச் செல்ல அடர்ந்த வனப்பகுதியில் 20 கி.மீ பயணம் செய்ய வேண்டியுள்ளது. பேருந்து வசதிகளும் உரிய நேரத்தில் இல்லை. இதனால் உயர்நிலைக்கல்வி பயில பள்ளி செல்லாமல் இடைநிற்றல் அதிகரிக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் கடந்த 2013 ஆண்டு நடுநிலைப்பள்ளியான இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த ரூ.ஒரு லட்சம் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுவிட்டது. ஆனால் இதுவரை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படவில்லை. தற்போது கல்வித்துறை தரம் உயர்த்த ஆயத்தமாகியுள்ள தாகத் தெரிகிறது. அந்த வகையில் பள்ளி கட்டுமானத்திற்காக சுமார் 2 ஏக்கர் இடம் தேவைப்படுகிறது. கோட்டை கிராமத்தில் தேவையான புறம்போக்கு இடம் உள்ளதாகத் தெரியவந்துள் ளது. ஆகையால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேவையான நிலத்தை பள்ளி பயன்பாட்டிற்கு அளிக்க ஆவண செய்யுமாறு அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர்.