தருமபுரி, ஜன.29- எருதாட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியு றுத்தி 14 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் ஸ்ரீபுதூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் இக் கோவில் திருவிழா 5 நாட்களுக்கு நடைபெறும். இத்திரு விழாவில் 14 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்குபெறுவார் கள். இந்தாண்டு பிப்.22 ஆம் தேதியன்று கோவில் வளா கத்தில் எருதாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் எருதாட்டம் நடைபெறும் இடம் சுற்றிலும் மரகொம்பை வைத்து பாது காப்பு வளையம் போன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நி லையில், எருதாட்டம் என்பது எங்கள் முன்னோர் வழிவழி யாக செய்து வந்த பாரம்பரிய வழக்கமாகும். பொதுமக்க ளுக்கு எந்தவொரு இடையூறு இல்லாமல் நடத்த முடிவு செய் துள்ளோம். இதற்கு பாதுகாப்பும், அனுமதியும் வழங்க வேண்டும் எனக்கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 14 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மனு அளித்தனர்.