districts

img

ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு பட்டா வழங்க கோரி மனு

திருப்பூர், அக்.9- பட்டா வழங்காமல் இழுத்தடிப்ப தாக கூறி தண்டுக்காரன்பாளையம் அருகே குமாரபாளையம் ஆதிதிராவி டர் காலனி பகுதி மக்கள் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் திங்களன்று நடை பெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு  அளித்துள்ளனர். உடனடியாக பட்டா  வழங்காவிட்டால் வரும் 19ஆம் தேதி  அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு நடத்துவோம் என் றும் தெரிவித்துள்ளனர்.    இதுகுறித்து ஊராட்சிமன்ற தலை வர் எம்.மயில்சாமி கூறியதாவது, அவி நாசி வட்டம் தண்டுக்காரன்பாளையம் கிராமம் குமாரபாளையம் ஆதிதிராவி டர் காலனி பகுதியில் 180க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். பல  கட்ட போராட்டங்களை தொடர்ந்து இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்கப் பட்டது. 57 நபர்களுக்கு கணினி பட்டா  வழங்குவதாக கூறி இரண்டு ஆண்டுக ளாக வட்டாட்சியர் அலுவலகத்தினர் இழுத்தடித்து வந்தனர். இதையடுத்து நான்கு மாதங்களுக்கு முன்பாக 40 நபர் களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இன் னும் 17 நபர்களுக்கு பட்டா வழங்கப்ப டாததால், வீடுகளுக்கு மின் இனைப்பு, குடிநீர் குழாய் போன்ற அடிப்படை வச திகள் வழங்கப்படவில்லை. இது  தொடர்பாகக் கிராம சபைக் கூட்டத்தி லும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள் ளது. பல முறை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக வீடுகளுக்கு பட்டா  வழங்க வேண்டும் என்று கூறினார். இதுதொடர்பாக தீண்டாமை ஒழிப்பு  முன்னணி மாவட்டச் செயலாளர் சி.கே. கனகராஜ் கூறுகையில். பாதிக்கப்பட்ட 17 நபர்களுக்கும் உடனடியாக பட்டா  வழங்க. நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லாவிட்டால் அக்டோபர் 19ஆம் தேதி தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமையில் பாதிக்கப்பட்ட மக்க ளின் குடும்பத்தினருடன் அவிநாசி வட் டாட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் எனக் கூறினார்.