districts

img

இலவச வீட்டுமனை கேட்டு விதொச மனு

பென்னாகரம், ஏப்.30- மன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் விடப்பட்ட சாலைப்பணி டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என பாப்பாரப்பட்டி பேரூராட்சி மன்ற சிபிஎம் உறுப்பினர் வே.விஸ்வநாதன் வலியுறுத்தி உள்ளார். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் பிருந்தா தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் கோமதி, துணைத் தலைவர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பேரூராட்சி 8 ஆவது வார்டு உறுப்பினர் வே.விஸ்வநாதன் பேசுகையில், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில், ஆதிதிராவிடர் காலனி முதல் வள்ளூர் காட்டுக்கொட்டாய் வரை சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த பணிக்கு பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கே தெரியாமலும், அலுவலக அறிவிப்பு பலகையிலும் பார்வைக்கு வைக்காமல்  ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. பணி உத்தரவு பெறுவதற்கு மட்டும் மன்றத்தின் பார்வைக்கும், ஒப்புதலுக்கும் வைக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தெரியாமல் டெண்டர் விதிமுறைகளை மீறி சாலைப் பணிக்கான டெண்டர்  விடப்பட்டுள்ளது. ஆகவே, இந்த டெண்டரை ரத்து செய்து, மறு டெண்டர் விட வேண்டும், என்றார். மேலும், வாரச்சந்தை, வண்டிப்பேட்டை சுங்கவரி வசூல் ஏலம் எடுத்த குத்தகைதாரர்களிடம் முழு ஏலத்தொகையை வசூலிக்காமல், ஏலத்துக்குக்கான உத்தரவு வழங்கக்கூடாது. கடந்த ஆண்டு வாரச்சந்தை, வண்டிப்பேட்டை, தினசரி காய்கறி மார்க்கெட் சுங்கவரி குத்தகைதாரர்களிடமிருந்து வரவேண்டிய பாக்கித்தொகை  19.12 லட்சம் ரூபாயை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வே.விசுவநாதன் வலியுறுத்தி உள்ளார்.