districts

img

கொரோனா இறப்புச் சான்று கோரி மனு

திருப்பூர், டிச.7- தனது கணவரின் இறப்பு  தொடர்பாக கொரோனா இறப்புச் சான்று வழங்கக் கோரி பெண் ஒருவர்  திருப்பூர் மாவட்ட ஆட்சியரி டம் மனு அளித்தார். மூலனூர் மொங்க நல்லாம் பாளையத்தை சேர்ந்த செல்வராணி (41), என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் குழந்தைவேல் (50), விவசாயி. எங்களுக்கு 10 வயதில் மகன், 20 வயதில்  மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மே மாதம் கொரோனா தொற்றால் கணவர் குழந்தைவேல் பாதிக்கப் பட்டார். தொடர்ந்து சிகிச்சைக்காக, திருப்பூர் அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தபோது, அவரை அங்கிருந்த மருத்துவர்கள் இட வசதியில்லை எனக்கூறி கரூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும்படி கூறினர். இதையடுத்து அங்கு சேர்க் கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். தொடந்து கடந்த மே 9-ஆம் தேதி உயிரிழந்தார். ஆனால் நிமோனியாவால் பாதிக்கப் பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் சான்றிதழ் அளித்தனர். கணவர் இறந்த துக்கத்தில் இதனை கவனிக் கவில்லை. ஆனால் அவர் கொரோனா வார்டில் தான் சிகிச்சை பெற்றார்.  ஆகவே, கொரோனா தொற்றால் உயிரிழந்த கணவ ருக்கான இழப்பீட்டை அரசு பெற்றுத்தர வேண்டும். கொரோ னாவால் உயிரிழந்த ஒரு பெற்றோர் திட்டத்தின் கீழ்,  குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும். இரு குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் இரண் டையும் கருத்தில் கொண்டு, வங்கியில் கணவர் பெற்ற ரூ.10 லட்சம் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ் வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.