பழங்குடியின சான்று கேட்டு மனு
ஈரோடு, மே 23- பழங்குடியின சான்று கேட்டு இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். ஈரோடு வட்டம், எலவமலை கிராமத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவரது பெற்றோர் குறுமன்ஸ் என்னும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், அவர்கள் முறையாக பழங்குடியின சான்று பெறவில்லை. ஆனால், இவரது சித்தப்பா குடும்பத்தார் பழங்குடியின சான்று பெற் றுள்ளனர். அதன் நகலை இணைத்து பலமுறை ஈரோடு சார் ஆட்சியரிடம் விண்ணப்பித்தும் அதுகுறித்து எந்த விசாரணையும் இன்றி நிராகரிக்கப்பட்டது. எனவே, முழு மையாக விசாரித்து எனக்கு குறுமன்ஸ் பழங்குடியின சான்று அளிக்குமாறு மீனாட்சி சுந்தரம் மாவட்ட ஆட்சி யரிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளார்.
திருப்பூரில் தாய், இரு மகன்கள் கொலை
திருப்பூர், மே 23 - திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துமாரி என்பவர் கடந்த 15 தினங்களுக்கு முன்பாக திருப்பூர் நெருப்பெரிச்சல் அருகே சேடர்பாளையம் பகுதியில் அரசுப்பள்ளி வீதியில் ஒரு வீட்டில் தனது 2 மகன்கள் தர்ணீஷ் மற்றும் நித்தீஷ் ஆகி யோருடன் குடியேறியுள்ளார். இந்நிலையில் இவர்களது வீட்டுக்கு நபர் ஒருவர் அடிக்கடி வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. திங்களன்று காலை வீட்டிற்கு வந்த நபரோடு தகராறு ஏற்பட்டதாகவும் சிறிது நேரத்தில் அந்த நபர் மட்டும் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டு உரிமையாளர் அங்கு சென்று பார்த்தபோது மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் சடல மாக இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், திருமுருகன்பூண்டி காவல் துறையினருக்கு தகவல் தெரி வித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை யினர் 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு தலைமையில் காவல் துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாற்றுத்திறன் குழந்தைகளுடன் தாய் மனு
ஈரோடு, மே 23- மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் வேலை வாய்ப்பு கேட்டு தாய் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், எழுமாத்தூர், பொன்விழா நகரைச் சேர்ந்தவர் செல்வி. இவரது கணவர் கதிர்வவேல். இவர்களுக்கு கமலி (16), கோகுல் (13) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் பிற வியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாதவர்கள். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கதிர்வேல் விபத்தில் உயி ரிழந்து விட்டார். இந்நிலையில், குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வரும் செல்வி, தான் 9 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளதாக வும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நிலையில், தனக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கி உத வுமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.
சுடுகாடு அளவீடு செய்து கேட்டு மனு
ஈரோடு, மே 23- ஈரோடு மாவட்டம், அந்தி யூர் வட்டம், வெள்ளி திருப்பூர் பகுதியிலுள்ள வில் லமரத்தூரைச் சேர்ந்தவர் செந்தில். இவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு வில், எங்கள் ஊரில் 80 குடும் பங்கள் உள்ளது. எங்கள் மூதாதையர்கள் பயன்ப டுத்தி வந்த சுடுகாட்டு நிலத்தை நாங்களும் பயன் படுத்தி வந்தோம். இந்நிலை யில் தற்போது அருகில் உள்ள நிலத்திற்கு சொந்தக் காரர், சுடுகாட்டில் மண் அள்ளி வருகிறார். எனவே, சுடுகாட்டிற்கு அளவீடு செய்து சாலை வசதி செய்து கொடுக்குமாறு கூறியுள் ளார்.
நீரில் மூழ்கி இரு பெண்கள் பலி
அவிநாசி, மே 23- திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகே உள்ள நெருப்பெரிச்சல் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மனைவி உமா (28). அதேபகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் மகள் காவியா (15) உட்பட 5க்கும் மேற்பட்ட பெண்கள் அப்பகுதியில் உள்ள பாறைக்குழியில் திங்களன்று குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக, கால் தடுக்கி நீரில் மூழ்கி காவியா, உமா ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவ லறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் உமாவின் உடலை மீட்டனர். மேலும், காவியாவின் உடலை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். இதுகுறித்து பெருமாநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தன்னிச்சையாக செயல்படும் குன்னத்தூர் பேரூராட்சித் தலைவர்
திருப்பூர் ஆட்சியரிடம் மன்ற உறுப்பினர்கள் புகார்
திருப்பூர், மே 23 - திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பேரூ ராட்சி மன்ற உறுப்பினர்களுக்குத் தெரியா மல் பேரூராட்சி மன்றத் தலைவர் தன்னிச்சை யாக செயல்படுவதை தடுத்து நிறுத்துமாறு மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப் பட்டு உள்ளது. திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சி யர் சு.வினீத் தலைமையில் திங்களன்று நடந்தது. குன்னத்தூரில் திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முருக சாமி, தமிழ்ச்செல்வி, செல்வி, திவ்யா, தன லட்சுமி, வெங்கடாசலம் மற்றும் வெங்க டேஷ் ஆகிய 7 பேர் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: குன்னத்தூர் பேரூராட்சி தலைவர் குமாரசாமி சுயேச்சை யாக இருப்பதால், திமுகவினரை புறக்க ணிக்கிறார். இந்த பேரூராட்சியில் உள்ள அதிமுக கவுன்சிலர்கள் 5 பேர், காங்கி ரஸ் 1, சுயேச்சை 1 ஆகியோருடன் சேர்ந்து கொண்டு, எங்களை தொடர்ந்து புறக்கணிக் கிறார். துணைத் தலைவரின் கணவர் தலை யீடு அதிகளவில் இருந்து வருகிறது. குறிப்பாக பெண் கவுன்சிலர்களை மதிப்பதில்லை. மன்ற ஒப்புதல் இல்லாமல் வேலைகளை செய்கிறார். பேரூராட்சிக்கு சொந்தமான குடிநீர் குழாய் பணி மற்றும் பழுது பார்க்கும் பணிக்கு இதுவரை ஒப் பந்தம் செய்யாமல் வேலை செய்து வருகி றார். இதனால் பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட் டுக் கொண்டனர். பழங்குடியினர் மனு தமிழ்நாடு பழங்குடியினர் இந்து காட்டு நாயக்கன் நலச்சங்கத்தினர் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட் டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட் டத்தில் உள்ள பெருமாள்புதூர் மற்றும் பார்த்தசாரதிபுரம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினராகிய எங்களுக்கு சாதிச்சான்றிதழ் நிலுவையில் உள்ளது. வரும் மாதம் பள்ளி சேர்க்கை நடைபெறும் என்பதால், அரசின் சலுகைகளை முறை யாக பெறுவதற்கு எங்கள் குழந்தைகளை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண் டும். பல்வேறு பகுதிகளிலும் எங்கள் சமூ கத்தை சேர்ந்தவர்களுக்கு எஸ்டி சான்றி தழை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். பொங்குபாளையம் ஊராட்சி மாரப்பன் பாளையம் புதூரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (65). இவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக் குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி் காப்பாற்றினர். தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது, எனக்கு பூர்விக சொத்து உள்ளது. இதில் எனது சகோ தரருக்கு போக எஞ்சிய மூன்றரை ஏக்கர் எனக்கு கிடைக்க வேண்டும். ஆனால் கூட்டு பட்டாவாக இருப்பதால், சகோத ரர் மட்டும் தற்போது 7 ஏக்கர் நிலத்தை அனுபவித்து வருகிறார். இது தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளாக நிலத்தை அளந்து தரு மாறு, பலரிடம் முறையிட்டு விட்டேன். ஆனால் அரசு நிர்வாகம் எதையும் செய்யா மல் காலம் தாழ்த்துகிறது என்றார். இதைய டுத்து அவரை காவல் நிலையத் துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
திருப்பூரில் தாய், இரு மகன்கள் கொலை
திருப்பூர், மே 23 - திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துமாரி என்பவர் கடந்த 15 தினங்களுக்கு முன்பாக திருப்பூர் நெருப்பெரிச்சல் அருகே சேடர்பாளையம் பகுதியில் அரசுப்பள்ளி வீதியில் ஒரு வீட்டில் தனது 2 மகன்கள் தர்ணீஷ் மற்றும் நித்தீஷ் ஆகி யோருடன் குடியேறியுள்ளார். இந்நிலையில் இவர்களது வீட்டுக்கு நபர் ஒருவர் அடிக்கடி வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. திங்களன்று காலை வீட்டிற்கு வந்த நபரோடு தகராறு ஏற்பட்டதாகவும் சிறிது நேரத்தில் அந்த நபர் மட்டும் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டு உரிமையாளர் அங்கு சென்று பார்த்தபோது மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் சடல மாக இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், திருமுருகன்பூண்டி காவல் துறையினருக்கு தகவல் தெரி வித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை யினர் 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு தலைமையில் காவல் துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிராமசபையில் மூன்று முறை வலியுறுத்தியும் மதுபானக் கடையை அகற்றாதது ஏன்?
மாவட்ட நிர்வாகத்துக்கு இடுவாய் ஊராட்சி தலைவர் கேள்வி
திருப்பூர், மே 23- இடுவாய் ஊராட்சியில் செயல் படும் டாஸ்மாக் மதுபானக் கடையை அங்கிருந்து அகற்ற வலி யுறுத்தி கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் மூன்று முறை கிராம சபை தீர்மானங்கள் நிறைவேற்றி ஆட்சிய ரிடம் கொடுத்தும் இதுவரை மது பானக் கடையை அகற்ற நடவ டிக்கை எடுக்காதது ஏன் என்று இடு வாய் ஊராட்சிமன்றத் தலைவர் கே. கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினரும், இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவருமான கே.கணேசன் இது தொடர்பாக திங் களன்று விடுத்துள்ள செய்திய றிக்கையில் கூறியிருப்பதாவது, இடுவாய் ஊராட்சி, இடுவாய் வடக் குப் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற வேண் டுமென கடந்த 2020 ஆம் ஆண்டு குடியரசு தினத்தில் சீராணம்பாளை யத்தில் நடந்த கிராமசபை கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. பொதுமக்களின் போக்குவரத் திற்கு இடையூறு செய்யக்கூடிய வகையிலும், கடைகளுக்குச் செல் லும் பெண்கள் பயப்படக்கூடிய நிலையிலும், அந்த கடைக்கு அருகே சாலையோரங்களிலும், பொது இடங்களிலும் மது அருந்துப வர்கள் மீது காவல்துறை தக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம சபை தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.
இந்த கிராம சபை தீர்மானம் மாவட்ட ஆட்சியரிடமும், மங்கலம் காவல் ஆய்வாளரிடமும் நேரில் வழங்கி நடவடிக்கை எடுக்க வலியு றுத்தப்பட்டது. அத்துடன் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன காளிபாளையம் பகு தியில் புதிய மதுபானக் கடை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டதை அறிந்து அதற்குத் தடை விதிக்க வும் மாவட்ட ஆட்சியரிடம் வலியு றுத்தப்பட்டது. எவ்வித நடவடிக்கையும் இல் லாத நிலையில் கடந்த ஆண்டு (2021) காந்தி ஜெயந்தி அன்று கிராம சபையில் மீண்டும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மறுபடியும் நேரில் வலியுறுத்தப் பட்டது. இதன் பிறகும் மாவட்ட நிர்வா கம், டாஸ்மாக் நிர்வாகம் நடவ டிக்கை எடுக்காத நிலையில் இந்த மாதம் மே முதல் தேதி நடைபெற்ற கிராம சபையில் ஏகமனதாக அனைத்து கட்சியினரும் சேர்ந்து இடுவாயில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இடுவாய் உள்ளாட்சி நிர்வாகம் பொறுப்பேற்றதில் இருந்து மொத் தம் 4 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றதில், மூன்று கூட்டங் களில் மதுபானக் கடையை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராம உள்ளாட்சியில் மிக அதிக அதிகாரம் படைத்தது மக்கள் பங் கேற்கும் கிராம சபை. இந்த கிராம சபை தீர்மானத்திற்கு தொடர்ந்து அரசு கவனம் செலுத்தாமல் இருப் பதை இடுவாய் ஊராட்சி நிர்வாகத் தின் சார்பாக வன்மையாக கண்டிக் கிறோம். மாவட்ட நிர்வாகம் பொதுமக்க ளின் கருத்தை கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து மதுக்கடையை அப்புறப்படுத்த வில்லை என்றால் பொதுமக்களை திரட்டி அனைத்து கட்சியின் சார்பா கவும், ஊராட்சி சார்பாகவும் போராட் டங்களை நடத்தும் நிலை ஏற்படும் என்று ஆட்சி நிர்வாகத்தில் இருப் போருக்கு தெரிவித்துக் கொள்வ தாக ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசன் கூறியுள்ளார்.
மின்தடை
திருப்பூர், மே 23- திருப்பூர் மாவட்டம், பழ வஞ்சிப்பாளையம் துணை மின்நிலையம், சந்திராபுரம் மின்பாதையில் மே 24 ஆம் தேதியன்று (இன்று) பரா மரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், செவ் வாயன்று மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை சந்திராபுரம் பிரிவு, சாஸ்திரி நகர், இந்திரா நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இதுபோல் திருப்பூர் கோட் டம், ஆட்சியர் அலுவலக துணை மின் நிலையத்தில் பாரதி நகர் உயர் மின்பாதை யில் அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், பாரதி நகர் பீடரில் செவ்வாயன்று மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை இந்திரா நகர், பல்லடம் ரோடு, வித்யால யம், பாரதி நகர், குளத்துப் பாளையம், செல்வலட்சுமி நகர், திருப்புரான் தோட்டம் ஆகிய பகுதிகளில் மின்விநி யோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் தாய், இரு மகன்கள் கொலை
திருப்பூர், மே 23 - திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துமாரி என்பவர் கடந்த 15 தினங்களுக்கு முன்பாக திருப்பூர் நெருப்பெரிச்சல் அருகே சேடர்பாளையம் பகுதியில் அரசுப்பள்ளி வீதியில் ஒரு வீட்டில் தனது 2 மகன்கள் தர்ணீஷ் மற்றும் நித்தீஷ் ஆகி யோருடன் குடியேறியுள்ளார். இந்நிலையில் இவர்களது வீட்டுக்கு நபர் ஒருவர் அடிக்கடி வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. திங்களன்று காலை வீட்டிற்கு வந்த நபரோடு தகராறு ஏற்பட்டதாகவும் சிறிது நேரத்தில் அந்த நபர் மட்டும் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டு உரிமையாளர் அங்கு சென்று பார்த்தபோது மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் சடல மாக இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், திருமுருகன்பூண்டி காவல் துறையினருக்கு தகவல் தெரி வித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை யினர் 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு தலைமையில் காவல் துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜிஎஸ்டிக்கு முந்தைய கணக்குகளுக்கு தண்டணையா? கோசியா அமைப்பு கண்டனம்
கோவை, மே 23– சிறு குறு நிறுவனங்கள் கொரோனா கால பாதிப்புகளில் இருந்து இன்னும் முழுவது மாக விடுபடவில்லை. இச்சூழலில் வணிக வரித்துறை பழைய வாட் (VAT) கால கோப்பு களை எடுத்து தண்டனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை கம்ப்ரெஸ்ஸர் இண் டஸ்ட்ரீஸ் அஸோஸியேஷன் (கோசியா) அமைப்பு கண்டித்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் தலைவர் ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வணிகவரித்துறை இணை ஆணையர் உடனான கூட்டத்திற்கு கோயமுத்தூர் கம்ப்ரெஸ்ஸர் இண்டஸ்ட் ரீஸ் அஸோஸியேஷன் நன்றியை தெரி வித்துக் கொள்கிறது. இதைப் போன்ற கூட் டங்கள் மேலும் நடைபெற வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதேநேரத்தில் சிறு, குறு நிறுவனங்கள் கொரோனா கால பாதிப் புகளில் இருந்து இன்னும் முழுவதுமாக விடு படவில்லை. ஆனாலும், வணிக வரித்துறை பழைய வாட் (VAT) கால கோப்புகளை எடுத்து தண்டனை நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருகிறது. மற்ற மாநில விற்பனைக்கு உண்டான சி குறியீடு விண்ணப்பம் அளிக் கப்படாமல் இருப்பதற்கு மற்ற மாநிலங்கள் ஜிஎஸ்டி வரி வந்த பின்னர், சி குறியீடு விண்ணப்பம் வழங்குவதை நிறுத்திவிட் டதே காரணம். அதனால் ஜூலை 2017 க்கு முந்தைய மற்ற மாநில விற்பனைக்கு எங்கள் சங்க உறுப்பினர்களால் சி குறியீடு விண்ணப்பம் அளிக்க இயலவில்லை. ஆகவே, ஜிஎஸ் டிக்கு முந்தைய கணக்குகளுக்கு தண்டனை நடவடிக்கைகளை, அதாவது வங்கி கணக்கை முடக்குவது, ‘சிவில் அரெஸ்ட் போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண் டும். உண்மையாக மற்ற மாநில டீலர்க ளுக்கு விற்கப்பட்டதற்கு சி குறியீடு விண் ணப்பத்திற்கு மாற்றாக, அவர்களிடம் இருந்தே பெற்றுக் கொண்டேன் என்பதற்கு ஒரு அத்தாட்சி வாங்கி கொடுப்பதன் மூலம் இந்த பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். வாட் வரி நிலுவையில் உள்ள அனைத்து வரி பாக் கிகளையும் வசூலிக்க சமாதான திட்டம் அறி விக்கப்பட வேண்டும். தற்போது, நிலவி வரும் தொழில் சூழ்நிலை கருதி அனைத்து அபராதங்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.