districts

img

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு

சேலம், பிப்.12- சங்ககிரி அருகே கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள இடங்கணச்சாலை நகராட்சிக்குட்பட்ட சின்னேரி பகுதி யைச் சேர்ந்த பொதுமக்கள், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கள் சீனிவாசன் தலைமையில், திங்க ளன்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அப்போது, பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் 5 பேர் மட்டுமே சென்று மனு அளிக்க வேண்டும் என்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், போலீசா ருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்பின் 5 பேர் மட்டுமே மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற் குள் சென்று அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து மனு  அளிக்க வந்த பெண்கள் கூறுகை யில், எங்கள் பகுதி அருகே மின் மயா னம் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர குப்பைகளை கொட்டி, தரம் பிரிக்கும் பணிகளும் நடைபெறு கிறது. இந்நிலையில், கழிவுநீர் சுத்தி கரிக்கும் நிலையம் அமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து பல்வேறு பணிகள் நடப்பதால், நிலத்தடி நீர்மட்டம் மிக வும் மாசுபட்டுவிட்டது. கிணறுகளில் தண்ணீர் நிறம் மாறி வருகிறது. கழி வுநீர் சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வர வேண்டாம் என ஏற்கனவே பல முறை மனு அளித்துள்ளோம். ஆனால், தொடர்ந்து கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இத்திட்டத்தை வேறு பகு திக்கு கொண்டு செல்ல வேண்டும், என்றனர்.