districts

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

ஈரோடு, பிப்.23- ஈரோடு அருகே வீட்டினை இடித்து அகற் றியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத் தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் கருப்பையா ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் (டி.ஆர்.ஓ) முருகேசனிடம் மனு  அளித்தார்.  இம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டம், பவானி காசிபாளையம்,  முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதி 1 இல் வசித்து வரும் செல்லமுத்து என் பவரின் மனைவி சுந்தரி. இவர், கடந்த 2008 ஆம் ஆண்டு பிப்.13 ஆம் தேதி பவானி தொட்டிபாளையம் ஊராட்சியில் 9 சென்ட் நிலத்தை, கிரையம் செய்து ஈரோடு மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் முறையாக பதிவு செய்தார். பவானி வட் டாட்சியர் அலுவலகத்தில் இருந்து அளந்து  அத்து காட்டப்பட்டுள்ளது. மேலும், தொட்டி பாளையம் ஊராட்சி மன்றத்தில் முறையாக அனுமதி பெறப்பட்டு, வீடு கட்டி வாழ்ந்து வந்தார்.  இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு  அதேபகுதியில் குடியிருக்கும் தனிநபர் ஒரு வர் வருவாய் துறை, காவல்துறை அதிகாரி களின் துணையோடு ஜேசிபி வாகனம் மூலம்  அந்த வீட்டை இடித்துள்ளார். வருவாய் துறையின் ஆவணங்களை ஆய்வு செய்யா மல் வீட்டினை இடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பல முறை மாவட்ட நிர்வாகம்,  காவல் துறையிடம் புகார் மனு வழங்கியுள் ளோம். மேலும், தாழ்த்தப்பட்டோர் ஆணை யத்தின் மூலமும் நடவடிக்கை எடுக்க மனு  வழங்கியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.  எனவே, அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த  சுந்தரி குடியிருந்த வீட்டினை இடித்து அகற் றியவர்கள் மீதும், அதற்கு உறுதுணை யாக இருந்த அதிகாரிகள் மீதும், தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவ டிக்கை எடுத்து, அவரது நிலத்தை மீட்டு தர  வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி யுள்ளார்.