districts

img

நூறு நாள் வேலை எங்கே? மனு கொடுக்கும் போராட்டம்

ஈரோடு, மே 9- அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், 100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டப்படி  கிராமப்புறத்தில் ஒரு நிதியாண்டில் 100 நாள் வேலை உத்தர வாதம் செய்ய வேண்டும். கிராம ஊராட்சிகளில் வேலை  கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் வேலை அட்டை  வழங்க வேண்டும். வேலை அட்டை பெற்ற 15 நாட்களில்  அவர்களுக்கு வேலை அளிக்க வேண்டும். வேலை அளிக்க முடியாத நிலையில் அவர்களுக்கு வேலையின்மை உத வித்தொகை வழங்க வேண்டும். அந்தியூர் ஒன்றியத்தில் வேலை அட்டை பெற்ற பலர், கடந்த சில மாதங்களாக வேலை யின்றி சிரமப்படுகின்றனர். இதனை கண்டித்து தமிழ்நாடு  அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட் டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாற்றுத்தி றனாளிகள் சங்க தாலுகாச் செயலாளர் முருகன் தலைமை  வகித்தார். மாவட்டத் தலைவர் சாவித்திரி, தாலுகாப்  பொருளாளர் அன்னக்கொடி ஆகியோர் சிறப்புரையாற்றி னர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.வி.மாரிமுத்து, மாற்றுத்திறனாளிகள் சங்க துணைத் தலைவர் நல்லப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன்பின் மனுவைப் பெற்றுக்கொண்ட ஊராட்சி ஒன்றிய  ஆணையாளர், இரண்டு வார காலத்திற்குள் வேலை அளிப்ப தாக உறுதியளித்தார்.